பக்கம் : 778
 

     (இ - ள்.) கொண்டல்கிளர்ந்து பரந்து குவிந்து - முகில்கள் மிக்குப் பரவிச் செறிந்து,
அலைமண்டுவபோல் - அலை அலையாய் விரைந்து செல்வதைப் போன்று, விண்தவழ்
மின்னிடு வாளினர் வில்லினர் - விசும்பின்கட் டவழ்கின்ற மின்னலைப் போன்று
ஒளிர்கின்ற வாளை ஏந்துநரும் வில்லை ஏந்துநரும் ஆகி, எண் திசையும் இருள்கூர -
எட்டுத் திக்குகளிலும் இருள்மிகும்படி, மணமாநகர் முன்னி - திருமணம் நிகழப்பெற்ற
போதன மாநகரத்தை எய்தி, இழிந்தார் - இறங்குவாராயினர், (எ - று.)

முகில்கள் குழுமி அலை அலையாய்ச் சென்றாற் போன்று, எண் டிசையும் இருளும்படி,
போதனநகரத்தை எய்தி இறங்குவாராயினர் என்க.
 

( 101 )

போதனநகரப் படையும் உடனே புறப்பட்டுப் போர்
தொடங்கல்

1232. படையென் றலுமே படைபா ரதுவு
மிடையின் றியெழுந்த 1திரண் டுகடல்
விடையின் றிவெகுண் டெழுகின் றனபோற்
புடையின் றிநிரந் தனபோர்த் தொழிலே.
 
     (இ - ள்.) படை என்றலுமே - அப்போதன மாநகரத்தே பகைப்படை புகுந்தது என்ற
பூசல் எழுந்தவுடனே, படை பாரதுவும் இடையின்றி எழுந்தது - பயாபதி வேந்தனுடைய
படைகளும் நிலத்தின்கண் வெற்றிடமில்லாமல் எழுந்தன, இரண்டு கடல் விடையின்றி
வெகுண்டு எழுகின்றனபோல் - இரு பெருங்கடல்கள் தம்மிடை விடுநிலமின்றிக்
கொந்தளித்து எதிர்ந்து எழுவதைப்போன்று, புடையின்றி போர்த்தொழில் நிரந்தன - இரு
படைகளும் இடையில்லாதபடி போர் புரியும் பொருட்டுக் கலந்தன, (எ - று.)

படை புக்கது என்று கூறக்கேட்ட அளவானே நம்பியின் படையும் கடலெனக்
கிளர்ந்தெழுந்தது; இரண்டு கடல்போல இரண்டுபடையும் போர்க்களத்தே பரவின என்க.
 

( 102 )

இது முதல் 6 செய்யுள்கள் ஒரு தொடர் - போர்நிகழ்ச்சி
தேர், குதிரை

1233. காரொடு கார்கட லோடு கருங்கடல்
சீரொடு 2சென்றெதிர் நேர்வன 3போல்வன
    

     (பாடம்) 1 திருண்டு. 2சென்றுதிளைப்பன. 3கோலத்.