பக்கம் : 779
 

 

  தேரொடு தேர்கலி மாவொடு மாபல
போரொடு வந்து புகுந்தன வன்றே.
 
     (இ - ள்.) காரொடுகார் - முகில்களுடனே முகில்களும், கடலோடு கருங்கடல் -
கடலுடனே கரிய கடல்களும், சீரொடு சென்று எதிர் நேர்வனபோல்வன - சிறப்போடு
சென்று எதிர்ப்பன போல்வனவாய், தேரொடு தேர் - தேர்களுடனே தேர்களும்,
கலிமாவொடு மா - புரவிகளுடனே புரவிகளும் போரொடு - போர்த்தொழிலோடு, வந்து
புகுந்தன அன்றே - நெருங்கி வந்து போர்செய்யப் புகுந்தன, அன்றே: அசை, ( )
கார் தேருக்கும், கடல் - குதிரைக்கும் உவமை.

தேருந் தேரும், புரவியும் புரவியும், முகிலோடு முகில் போன்றும் கடலோடு கடல்போன்றும்
எதிர்ந்து பொருதன, என்க.
 

( 103 )

காலாட்படை, யானைப்படை

1234. இலையே ரயில்வா ளியொடெண் டிசையுஞ்
சிலையே யெனவுண் டுசிலைத் தொழுதி
மலையே மலையோடு 1மலைந் தனபோற்
கொலைவே ழமொடேற் றனகுஞ் சரமே.
 
     (இ - ள்.) இலைஏர் அயில் வாளியொடு எண்திசையும் சிலையே உண்டு எனச்
சிலைத்தொழுதி - இலையால் எழிலுடையவாகிய கூரிய அம்புகளோடே எண் திசைகளினும்
விற்படைகளே நிரம்பியுள்ளன என்று கூறுமாறு உளவாயின விற்படைக் கூட்டங்கள்,
மலையே மலையோடு மலைந்தனபோல் - மலைகள் மலைகளோடு போராற்றினாற் போன்று,
கொலை வேழமொடு குஞ்சரம் ஏற்றன - கொல்லுதற் றொழிலையுடைய யானைகளுடனே
யானைகள் போர் ஆற்றின, (எ - று.)

எங்கும் கணைகளும் விற்களுமே உளவாயின என்னும்படி விற்படைமிக்குத் தம்முட்
பொருதன; மலையோடு மலை பொருதாப் போலே, யானையோடு யானைகள் முட்டின,
என்க.
 

( 104 )

குதிரைப்போர்

1235. கொடிமே லுடையா 2னைகள்கும் பமுதைத்
தடிமே லனவா கவெழுந் தரசர்
முடிமே லனவா முகின்மே லனவாய்ப்
படிமே லனவா யினபாய் பரியே.
    

 


     (பாடம்)1 மலைத். 2 யானையள்.