பக்கம் : 781
 

     (இ - ள்.) மதயானை - மதக்களிப்புடைய யானைகள், படையோர் படையுள் செறியா
- தத்தம் பகைவர்களின் படைகளூடே புகுந்து நெருங்கி, நுதல் ஏறுகரம் - நெற்றியிற்
பொருந்துதலையுடைய துதிக்கைகளாலே, பறியா முறியா - பகைவர்களின் கருவிகளைப்
பறித்தும் முறித்தும், நெறியார் - வழியிலே பொருந்திய, நிரைமாவொடு -
அணிவகுக்கப்பட்ட புரவிகளுடனே, தேர்கள் எடுத்து எறியா உதையா - தேர்களையும்
தூக்கி எறிந்தும் உதைத்தும், திரிந்தன - திரியா நின்றன, (எ - று.)

யானைகள் படையினூடே புகுந்து, தேர்களை எடுத்தெறிந்தும், கைகளாலே பகைவர்
கருவிகளைப் பறித்தும், முறித்தும் திரிந்தன.
 

( 107 )

காலாட் படை

1238. கடுநீ ரவர்கண் ணெரிகொண் டுகனன்
றிடிநீ ருருமின் னெதிரே யெறிய
வடிநீ ரன1வா ளிடையே முரியாப்
படுமீ னெனவீழ்ந் துபதைத் தனவே.
 
     (இ - ள்.) கடுநீரவர் - இருபடையினும் உள்ள வன்கண்மையுடைய வாள்மறவர்கள்,
கண் எரிகொண்டு கனன்று - கண்களிலே சினத்தீயைக்கொண்டு வெகுண்டு, இடிநீர்
உருமின் இடிக்கும் இயல்புடைய இடிபோன்று, எதிரே எறிய - ஒருவர்க்கொருவர் எதிராக
வீச, வடிநீரன வாள் - வடிக்கப்பட்ட பண்பாலுயர்ந்த வாள்கள், இடையே முறியா -
ஒன்றனோடு ஒன்று தாக்குதலாலே நடுவண் முறிந்து, படுமீன் என வீழ்ந்து பதைத்தன -
வானின்று வீழ்ந்துபடும் மீன் தரையிடத்தே வீழ்ந்து துடிப்பதுபோன்று நிலத்தே வீழ்ந்து
துடித்தன, (எ - று.)

படுமீன் - வலையிற்பட்ட கரையிடத்தே எறிந்த மீனுமாம்.

மறவர் கனன்று வீசிய வாள்கள் ஒன்றோடொன்று தாக்கி, இடையே முறிந்து, மண்மேலே
மீன்போல் வீழ்ந்து துடித்தன, என்க.
 

( 108 )

வில் அறுபட்டமை

1239. வடிநூ னுதிகவ் வியவா ளையொடும்
விடுமீ னெறிதூண் டில்விசைத் தனபோ
லடுநா ணிடையே றியவம் பினொடு
நெடுநா ணறவிற் கணிமிர்ந் தனவே.
 
    

 


     (பாடம்) 1வாளிடையே.