பக்கம் : 783
 

 

  பொன்மலை யொன்றொடு போர்செய மேவிய
மன்மலை போலவெ ழுந்து1ம லைந்தார்.
 
     (இ - ள்.) தென்மலையார் திறன் மன்னவன் - தென்மலையில் வாழ்வோர்தம் ஆற்றல்
மிக்க அரசனான அருக்க கீர்த்தியின், மன்னிய வில் தனி மலைவார் இன்மையின் -
கையிடத்தே நிலைபெற்ற வில்லினைத் தனியே நின்று எதிர்த்துப் போராற்றும்
ஆற்றலுடையார் ஒருவரேனும் தம்முள் இல்லாமையால், விஞ்சையர் - அவ்விச்சாதரர்,
பொன்மலை ஒன்றொடு போர் செய மேவிய - ஒரு பொன்மலையோடே போராற்றப்புக்க,
மன்மலை போல எழுந்து மலைந்தார் - பலமலைகள் ஒன்று கூடினாற் போன்று கூடிப்
போர் செய்தனர், (எ - று.)

மன்மலை என்புழி ஈண்டு மன் ஆக்கப் பொருட்டாய் பன்மை குறித்து நின்றது.

அருக்ககீர்த்தியோடே தனி நின்று போர்மலையும் ஆற்றலுடையார் இன்மையின், ஒரு
மலையோடே பலமலைகள் பொருதாற் போன்று, பல மன்னரும் ஒருங்கே கூடிப்
போரிடலானார் என்க.
 

( 111 )

 

1242. கோளென நாளென மின்னுபு குன்றெறி
வேளனை யான்மிசை விஞ்சையர் வெஞ்சுடர்
வாளினர் வில்லினர் மால்வரை போல்வன
தோளினர் தாளினர் தோன்றின ரன்றே.
 
     (இ - ள்.) குன்று எறிவேள் அனையான்மிசை - குருகு பெயர்க்குன்றம் கொன்ற
முருகவேளை ஒத்த அருக்ககீர்த்தி ஒருவன்மேல், விஞ்சையர் - விச்சாதரர், கோள் என
நாள் என மின்னுபு - கோளும் நாளும்போலச் சுடரும், வெஞ்சுடர் வாளினர் வில்லினர் -
வெவ்விய சுடருடைய வாளுடையோரும் வில்லுடையோரும், மால்வரை போல்வன
தோளினர் தாளினர் - பெரிய மலைகளை ஒத்தனவாகிய தோள்கள் உடையோரும் கால்கள்
உடையோருமாய், தோன்றினர் - வந்து மொய்த்தனர் : அன்றே, அசை, (எ - று.)
கோள் - ஞாயிறு முதலியன ; நாள் - அசுவினி முதலியன.
குன்றத்தினை எறிந்த செவ்வேளை அனைய அருக்ககீர்த்தியின் முன்னர்க் கோளும் நாளும்
போன்று சுடரும் வாளினரும் வில்லினரும் தாளினரும் தோளினருமாய்க் குன்றமன்னார்
பலர் மொய்த்தனர், என்க.
 

( 112 )


     (பாடம்) 1 பரந்தார்.