பக்கம் : 787
 

 

1249. இடுதவி சொடுதொடர் 1பிரிய 2வெந்தகத்
தடுசரம் படுதொறு மலறி வாலதி
நெடிதென நிறுத்திநீ ருகுத்து நீள்செவி
மடிதர முடுகின மான யானையே.
 
     (இ - ள்.) இடு தவிசொடு - எருத்தின்மேல் இடப்பட்ட இருக்கைகளுடனே, தொடர்பு
- வரிசையும், இரிய - குலைந்து ஒழியும்படி, அகத்து - தம் உடலின் ஊடே, அடுசரம்
படுதொறும் - கொல்லுதலுடைய கணைகள் பாயுந்தோறும், வெந்து - மனம்வெம்பி, அலறி -
பிளிறொலி செய்து, நீர் உகுத்து - கண்ணீர்சொரிந்து, நீள்செவி மடிதர - அச்சத்தால்
நீண்ட செவிகள் மடிந்துகிடப்ப, வாலதி நெடிதென நிறுத்தி - தம் வால் நீளிது என்னும்படி
தூக்கி, மானயானை முடுகின - பெரிய யானைகள் விரைந்து புறமிட்டோடின, ஏ : அசை,
(எ - று.)

பகைவர்கள் அணிவகுத்து நடத்திச் சென்ற யானைகள் கணைபடுந் தோறும், அலறிச்
செவிமடிதர, வாலைத் தூக்கிக்கொண்டு உடைந்தோடின, என்க.
 

( 119 )

வாலதி - வால்.

1234. முரசுக ளுடைந்தன முடிகண் மூழ்கின
வரசுக ளவிந்தன வரவத் தேர்க்குழாம்
வரைசெல விவுளிக ளிடறி வெந்தடி
நிரைசெல விழிந3தது குருதி நீத்தமே.
 
     (இ - ள்.) முரசுகள் உடைந்தன - முரசுகள் நொறுங்கின. மூடிகள் மூழ்கின
- முடியணிகள் குருதியில் முழுகிப்போயின, அரசுகள் அவிந்தன - அரசர்கள் மாண்டனர்,
அரவத்தேர்க்குழாம் விரைசெலல் இவுளிகள் இடறி - ஒலிமிக்க தேர்க்கூட்டத்தினையும்
விரைந்த செலவினையுடைய குதிரைகளையும் உருட்டிக்கொண்டு, வெந்தடி நிரைசெல -
வெவ்விய ஊன்கள் வரிசை வரிசையாய் மிதந்து செல்லும்படி, குருதி நீத்தம் இழிந்தது -
செந்நீர் வெள்ளம் ஒழுகிற்று, (எ - று.)

முரசங்கள் நொறுங்கின; முடிகள் குருதியில் மூழ்கின; அரசர்கள் மாண்டனர்; தேர்களையும்;
குதிரைகளையும் ஈர்த்துக்கொண்டு குருதி வெள்ளம் ஓடிற்று, என்க.
 

( 120 )

தம் படை உடைந்தமை தூதர் அச்சுவ கண்டனுக்கு
உரைத்தல்.

1251. காலெதிர் கடலுடைந் திட்ட தொப்பநம்
பாலது படையுடைந் திட்ட தின்றென
    

 


     (பாடம்) 1பரிய. 2வேந். 3வழிந்தது.