பக்கம் : 788
 

 

  மாலெதிர் கடற்படை மான வேந்தனைக்
கோலெதிர் கையவன் றொழுது கூறினான்.
 
     (இ - ள்.) கால் எதிர் கடல் உடைந்திட்டது ஒப்ப - பெருங்காற்றின் முன்னர்க் கடல்
உடைந்து ஓடுவதுபோன்று, நம்பாலது படை - நம்முடையவாகிய படை, இன்று
உடைந்திட்டது என - இற்றைப் போரின்கண் புறமிட்டது என்று, கோல் எதிர் கையவன்
- கோற்பிடித்த கையையுடைய தூதன் ஒருவன், மால் எதிர் கடற்படை மான வேந்தனை -
பெரிய கடல்போன்ற போர் எதிர்க்கும் படையையுடைய மானம் மிக்க அச்சுவகண்டனை,
தொழுது கூறினான் - வணங்கிக் கூறுவானாயினான்,
(எ - று.)

இவ்வாறு படைகள் உடைந்தமை கண்ட ஒரு தூதன் விரைந்து தன் அரசனாகிய
அச்சுவகண்டனுக்குக் கூறினன் என்க.
 

( 121 )

இதுவுமது

1252. நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே
போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும்
வேற்பயங் கொண்டனர் 1விரவ லார்நமர்
காற்பயங் கொண்டனர் கால வேலினாய்.
 
     (இ - ள்.) நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போல் - மெய்ந் நூல்களின்
பயன்கள் பலவற்றைத் தன்பாற் கொண்டு நுணுகிய கேள்விச் செல்வத்தைப்போன்று, பயம்
பலவொடு புகழ்களே தரும் - பல்வேறு பயன்களுடனே சிறந்த புகழையும் அளிப்பதாகிய,
வேல் பயம்கொண்டனர் விரவலார் - வேற்படையின் பயனாகிய வெற்றியை நம்
பகைவர்கள் கொள்வாராயினர், நமர் - நம் படைஞர்கள், கால் பயம் கொண்டனர் - வலிய
காலாற் பெறும் பயனாகிய தோற்றுப் புறமிட்டோடி உய்தலைப்பெற்றனர், காலவேலினாய் -
மறலிபோன்ற வேற்படையுடைய வேந்தே, (எ - று.)

அங்ஙனம் கூறுகின்ற தூதன், பகைவர் வேலாலாய பயனை அடைந்தனர்; நமர் காலாலாய
பயனை யடைந்தனர், என்றார் என்க, வேற்பயன் - வெற்றி. காற்பயன் - உடைந்தோடி
உய்தல்.
 

( 122 )

இதுவுமது

1253. பெரியவாய்ப் 2பிறையெயி றிலங்க நக்குநக்
குரியவா ளெரியெழ 3வோச்சி நம்மொடு
    

 


     (பாடம்) 1 தெவ்வர் நத்தமர். 2 வளையெயி. 3முறுக்கி.