பக்கம் : 790 | | அச்சுவகண்டன் சினமொழி | 1255. | ஒன்றுவில் லிரண்டுதோ ளொருவ னெய்யவே யின்றுநம் படையுடைந் திட்ட தாய்விடி னன்றுபோர் நமர்கள தென்று நக்கனன் குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான். | (இ - ள்.) ஒன்றுவில் - வில்லும் ஒரோ ஒன்று, இரண்டு தோள் ஒருவன் எய்யவே - அதனை எய்தானும் இரண்டே தோள்களையுடைய ஒருத்தனே, இன்று நம்படை உடைந்திட்ட தாய்விடின் - இத்துணைக்கே ஆற்றாது இன்று ஒரே நாளில் நமது பெரும்படை தோற்றோடியதாயவிடத்து, நமர்களது போர் நன்று என்று நக்கனன் - நம் மறமன்னர்களின் போர் ஆற்றும் திறம் நன்று நன்று என்று கூறிச் சினத்தாற் சிரிப்பானாயினன், குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான் - மலை போன்று பருத்துத் திரண்டுள்ள தோள்களையுடையவனாகிய அச்சுவகண்டன், (எ - று.) ஒரே விற்பிடித்து இரண்டுதோளுடை ஒருத்தன் எய்யவோ அளவிறந்த நம் வீரர் உடைந்தனர்! நன்று! நன்று! என நக்கான் என்க. முருகனும் இராவணனும் கார்த்தவீரியனும் அல்லன் என்பான், இரண்டு தோள் ஒருவன் என்றான். | ( 125 ) | மற்றொரு தூதன் இரதநூபுரத்திற்குச் சென்ற நம்படை உடைந்ததெனல் | 1256. | இரதநூ புரத்தின்மே லெழுந்த வேந்தரும் பொருதுதா 1மழிந்தமர் புறக்கிட் டோடினார். 2அரிதினின் விளைவரை யன்றி யாவருங் கருதிய முடிப்பவ ரில்லை காண்மினே. | இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். (இ - ள்.) இரதநூபுரத்தின்மேல் எழுந்த வேந்தரும் தாம் - இரதநூபுரச் சக்கிரவாளத்தின்மேற் சென்ற நம் மன்னவரும், அமர்பொருது அழிந்து புறக்கிட்டு ஓடினார் - ஆண்டுப் போராற்றிப் பகைவர்க்குத் தோற்றுப் புறமிட்டு ஓடியுள்ளனர், அரிதினின் விளைவதை அன்றி - இவர்க்கு வெற்றி எங்கேனும் அருமையாக உண்டாதலே யல்லது, யாவரும் - நம் படைஞர் அனைவருள்ளும், கருதிய முடிப்பவர் இல்லை காண்மின்-தாம் கருதியவற்றை (இதனால் இதனை இன்னபடி முடிப்பேன் என்று ஆராய்ந்து அதனை அதனால் அவ்வாறே) முடிக்கும் வினைத்திட்பம் உடையார் ஒருவரேனும் இலர், இவ்வுண்மையை நன்கு உணருங்கோள், (எ - று.) | |
| (பாடம்) 1 மழிந்தவர். 2 உரிதினின். | | |
|
|