பக்கம் : 1227
 

     (இ - ள்.) நிழல்மணிப் பூணோய் - ஒளியையுடைய மணி யணிகலனையுடையவனான,
மன்னா - அரசனே!, தானம் - தானங்கள் என்பன, உலைவில் ஏற்போன் உடன் -
துன்பத்தாலே இரப்பவனோடு, ஈபவன் - வழங்குவோனும், ஈயும் மலைவுஇல் பொருள் -
ஈதற்குரிய குற்றமற்ற பொருளும் என்னும், இன்ன மாட்சிய - இத்தகைய மூன்றானும்
மாண்புடையவாய், தலையும் இடையும் கடையுமா - தலையயாய தானம் இடையாய தானம்
கடையாய தானம் என்று மூன்று வகையவாக, சாற்றும் நிலைமைய - கூறப்படும்
தன்மையுடையன, (எ - று.)

     அந்நான்கனுள் தானம் என்பது தலையிடைகடை எனும் முத்திறத்துடன் ஏற்போன்
ஈபவன் பொருள் என்னும் மூன்று பகுதியினையும் உடைய தென்க.

(882)

 

துறவோர்க் கெதிர்தற் பெருமை

1993. 1ஐமை யமைந்தார்க் கெழுமை யமைந்தவர்
இம்மை நினையா ரிமைபத 2மீவழி
மும்மைக்கு 3மும்மடங் காய முறைமையில்
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே.
 
     (இ - ள்.) ஐமை அமைந்தார்க்கு - பஞ்சசமிதி என்னும் ஐந்து வகையவாகிய
ஒழுக்கத்தே நிலைபெற்ற துறவிகட்கு, எழுமை அமைந்தவர் - போதிசைவு முதலிய ஏழு
குணங்களும் அமைந்த இல்லறத்தார்கள், இம்மை - இப்பிறப்பின் கண்ணே, நினையார் -
பிறிதொன்றனையும் கருதாது (அறமே கருதி), அமைபதம் ஈவழி - சமைந்த சோற்றை
வழங்குமிடத்து, மும்மைக்கு மும்மடங்காயமுறைமையில் - பல மடங்கு, மிகையாக
பொய்மையில் புண்ணியம் - பொய்த்தலில்லாத அறம், புகுந்து போர்க்கும் - அடைந்து
நிறையும், (எ - று.)

     மும்மைக்கு மும்மடங்காய என்றது இறப்பப் பெரிதாக என்றபடி,

     “தான்சிறி தாயிடினும் தக்கார்கைப் பட்டக்கால்
     வான்சிறிதாய்ப் போர்த்து விடும்Ó, (நாலடி) ஐமை அமைந்தார் - பஞ்ச சமிதி என்னும் ஐவகைத் துறவொழுக் கங்களிலே அமைந்த துறவியர். அவற்றை,

     “முன்னுகத் தளவு நோக்கி முன்புபின் பிரியச் செல்லார்
     இன்சொலும் பிறர்தமக்கும் இதத்தன அன்றிச் சொல்லார்
     அன்புநீத்து உயிரை ஓம்பி அளவமைந்து உண்பார் ஆர்க்கும்
     துன்புறக் கோடல் வைத்தல் மலங்களைத் துறத்தல் செய்யார்.Ó  என்னும் மேருமந்தர புராணச் செய்யுளானும் அறிக.

(883)

 

     (பாடம்) 1அய்மை. 2 மிவ்வழி. 3 மும்மடங்.