பக்கம் : 792 | | (இ - ள்.) விண்மிசை சென்றவர் மெலிவும் - வரைமேல வாய இரதநூபுரத்தின் மேற்சென்ற மன்னர்கள் தோற்றதையும், வேற்றவர் மண்மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் - பகைவர்களுடைய சுரமை நாட்டின்மேற் சென்ற மன்னர்கள் புறமிட்ட செய்தியும், புண்மிசை எஃகம் புக்கு ஒளிப்பபோல் - பழைய புண்ணின்கண் வேற்படை புகுந்து ஒளித்தாற் போன்று, மனத்துண் மிசை ஒழி படை ஆகி ஊன்ற - நெஞ்சினுள்ளே புகுந்து அதனை மேன்மேலும் அழிக்கும் கருவிகளாகித் தைக்க, (எ - று.) ஒழிபடை : வினைத்தொகை. ஒழித்தல் - அழித்தல். திவிட்டன் படையோடே எதிர்த்தோரும், அருக்கனுக்கு ஆற்றாது உடைந்தனர் என்று தூதன் கூறியபோதே, இதரநூபுரத்தும் நமர் உடைந்தனர் என்று ஒரு தூதன் வந்து உணர்த்தினான்; அச்சுவகண்டன் புண்மிசை வேல்புக்காற் போன்று, மனம் உளைந்தான் என்க. | ( 128 ) | அச்சுவக்கிரீவன் மேற்செலவு | 1259. | இருந்தினி யென்னையிங் கெழுக வென்றுபோய்ப் பெருந்தகை யருங்கலப் பெயர்கொள் குன்றின்மேற் பரந்தன படையொடு பாடி 1விட்டனன் கருந்திரண் முகில்புரை காள மேனியான். | (இ - ள்.) ஈங்கு இனி இருந்து என்னை - இவ்விடத்தே யாம் இனி வாளா விருத்தலால் பயன் யாது, எழுக என்று போய் - எல்லீரும் எழுங்கோள் என்று கூறிப்போய், பெருந்தகை அருங்கலப் பெயர்கொள் குன்றின்மேல் - மிக்க பெருமையுடைய அருங்கலம் என்னும் பெயர் கொண்டதொரு மலையின் மேலே, பரந்தன படையொடு பாடி விட்டனன் - விரிந்த படையுடனே பாடி வீடமைத்துத் தங்கினான், கருந்திரள் முகில்புரை காள மேனியான் - கரியதாய்த் திரண்டுள்ள மேகத்தை ஒத்த கருமை நிறமுடைய அச்சுவகண்டன், (எ - று.) இனி இங்கிருத்தலாற் பயனின்று; என் படை எழுக! என்று படையோடே போந்து, ‘அருங்கலம்’ என்னும் மலையிலே, அச்சுவகண்டன் இறங்கினன் என்க. இம்மலை சீபுராணத்துள் ‘இரதாவர்த்தம்’ என்று கூறப்பட்டுளது. | ( 129 ) | அச்சுவகண்டன் தம்பிமார் போர்க் கெழுதல் | 1260. | அச்சுவக் கிரீவனுக் கிளைய 2ராயினோர் கச்சையங் கருங்களி யானை வல்லவர் | | |
| (பாடம்) 1 விட்டவே. 2காளையர். | | |
|
|