பக்கம் : 793
 

 

  விச்சையர் கடற்படை பரப்பி 1விண்மிசை
நச்செரி யுமிழ்தரு நகையர் தோன்றினார்.
 
     (இ - ள்.) அச்சுவக் கிரீவனுக்கு இளையர் ஆயினார் - அச்சுவகண்டனுக்குத்
தம்பியார் ஆகியோரும், கச்சை அங் கருங்களி யானை வல்லவர் - கட்டுங் கயிற்றையுடைய
அழகிய கரிய யானைமேற்கொண்டு போர் ஆற்றுதலில் வல்லுநரும் விச்சையர் - பல்வேறு
மாயப்போர் வல்லுநரும் ஆகிய இளைஞர்கள், கடற்படை பரப்பி - கடல்போன்ற தம்
பெரும் படைகளை விரியக் கொண்டு, விண்மிசை நச்சு எரி உமிழ்தரும் நகையர்
தோன்றினர் - விசும்பிடத்தே நஞ்சுத் தீயைக் காலும் சினச் சிரிப்புடையராய் வந்து
தோன்றாநின்றனர், (எ - று.)
விச்சையர் கடற்படை - விச்சாதரர் கடல்போன்ற படை எனலும் ஒன்று.
அப்போது அச்சுவகண்டன் தம்பியரும், யானைப்போர் வல்லுநரும், ஆகிய வீரர்கள் தம்
கடற்படை பரப்பி, சின நகையுடையராய் வந்து தோன்றினர் என்க.
 

( 130 )

நீலரதன் சூண்மொழி

1261. இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக்
குளைவன செய்தவ ருயிரை மற்றவர்
கிளையொடுங் கீண்டர சாடு மன்றெனில்
வளையொடுந் தலைமுடித் திருந்து வாழ்துமே.
 
     (இ - ள்.) இளையருள் பெரியவன் சொல்லும் - அவ்வாறு தோன்றிய அச்சுவகண்டன்
தம்பிமாருள்ளே மூத்தவன் சொல்வான், எம் இறை உளைவன செய்தவர் உயிரை -
எம்முடைய தலைவன் வருந்தற்கு ஏதுவாய செயல்களைச் செய்த நம் பகைவர்களுடைய
உயிரை, மற்றவர் கிளையொடும் கீண்டு - அவர்தம் கேளிரோடே அழித்து, அரசு ஆடும் -
அரசினை ஆள்வேம், அன்றெனில் - அவ்வாறு அழித்திலேமெனில், வளையொடு தலை
முடித்து இருந்து வாழ்தும் - மகளிர்போல வளையல் அணிந்து தலைமயிரை ஐம்பாலாய்
வகுத்து முடிந்துகொண்டு இல்லினுள்ளேயே இருந்து வாழ்வேமாக, (எ - று.)
மணிகண்டன், எம் இறைவனை உளையுமாறு செய்த நம் பகைவரைக் கொல்வேம் ;
இன்றெனில் மகளிர் போன்று வளையணிந்து தலை முடித்து வாழ்வேம், என்றான் என்க.
 

( 131 )


     (பாடம்) 1விண்மிசை.