பக்கம் : 794 | | நீலகண்டன் சினநகை | 1262. | மாலுமாங் குடையர்கொன் 1மனிதர் நம்மொடு போலுமாற் பொரலுறு கின்ற தென்றுதன் கோலவால் வளையெயி றிலங்க2க் கூறினான் நீலமா மணிக்கண்ட னென்னு 3நேரிலான். | (இ - ள்.) மனிதர் நம்மொடு போலும் பொரல் உறுகின்றது, எளிய மனிதர்களேயோ நம்மோடு போர் ஆற்றத்துணிவது - ஆங்கு மாலும் உடையர் கொல் - அத்தகையதொரு மதி மயக்கமும் அவர் உடையரோ, என்று தன் கோல வால்வளை எயிறு இலங்கக் கூறினான் - என்று தன்னுடைய அழகிய வெண்ணிறமான வளைந்த பற்கள் விளங்க உரைத்தான் நீலமா மணிக் கண்டன் என்னும் நேரிலான் - மரகதமணி போன்ற நிறமுடைய கழுத்துண்மையால் நீல கண்டன் என்னும் பெயரை யுடையவனாகிய ஒப்பிலாதவன், (எ - று.) நீலகண்டன், தம்மோடு போர் செய்து வெல்லலாம், என்று மனிதர் எண்ணியது மயக்கத்தாலே தான், என்று தன் பற்கள் புறந்தோன்ற நக்கான் என்க. | ( 132 ) | வயிரகண்டன் வீர மொழி | 1263. | முளைந்தவா ளெயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் விளைந்ததார் வெறிகொள வைகும் வேற்றவ ருளைந்தபோர் நிலத்தினுள் ளுருள்ப வென்றனன் வளைந்தவா ளெயிற்றவன் வயிர கண்டனே. | (இ - ள்.) வளைந்த வாள் எயிற்றவன் வயிரகண்டன் - மற்றொரு தம்பியாகிய வளைந்த ஒளியுடைய பற்களையுடைய வயிரகண்டன் என்பான், முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் விளைந்த தார் வெறிகொள் வைகும் வேற்றவர் - இதுகாறும் நிரல்பட முளைத்த ஒளியுடைய பற்களையுடைய இளமகளிர்களின் முலைகள் பாய்தலால் நெருக்குண்டு தேன்றுளிக்கும் மலர் மாலைகள் மணங்கமழுமாறு இனிதின் வதிந்த நம் பகைவர், உளைந்த போர் நிலத்தினுள் உருள்ப - இனி அந்தோ! வருந்திய போர்க்களத்தே பிணமாய் உருளா நிற்பர் பாவம்!, என்றான் - என்று இயம்பினான், (எ - று.) முளைந்த : மெலித்தல் விகாரம் : நிரல்பட முளைத்த என்க. | |
| (பாடம்)1 மனிசர். 2 நக்கனன். 3 ங்காளையே. | | |
|
|