பக்கம் : 799
 

     பேர் - அதுகாறும் பெற்ற மறப்புகழ், அதன்மேல் படை எறிந்தென்றது அப்புகழ்
இறக்கும்படி எறிந்து என்றவாறு. போரில் தோற்றவர்க்குப் புகழும், சின்னங்களும்,
வாகைமாலையும், ஒருங்கழிதலால் அவற்றை எறிந்து என்றார். சின்னம் - மறவர்களுக்கு
அவர்தம் மறச்சிறப்புக் குறித்து மன்னர்கள் வழங்கும் அடையாளமாகிய பொற்பூ, வாள்
முதலியன.
 

( 142 )

 

1273. தாளிடை மிடைந்தன தாள்க டம்முளே
தோளிடை மிடைந்தன தோள்க டோளிடை
வாளிடை மிடைந்தன வாள்கண் மற்றிவை
நாளிடைப் படுங்கொலோ நாங்கள் சொல்லினே.
 
     (இ - ள்.) தாளிடை தாள்கள் மிடைந்தன - கால்களுடே கால்கள் பின்னின,
தோளிடை தோள்கள் தம்முளே மிடைந்தன - தோள்களோடு தோள்கள் தமக்குள்
நெருங்கின, தோளிடை வாள்கள் வாளிடைமிடைந்தன - கைகளிடத்தேயுள்ள வாள்கள்
வாள்களோடு நெருங்கின, மற்றிவை - இன்னோரன்ன போர் நிகழ்ச்சிகளை, நாங்கள்
சொல்லினே - எஞ்சாது
யாம் சொல்லத் தொடங்கினால், நாள் இடைப்படும் - எம்மாயுள் நாள் இடையிலே
கழிவனவாம், கொல், ஓ : அசைகள், (எ - று.)

இதைக் கூறுதற்கு எம்மாயுள் போதாது என்றவாறு, கால்களோடே கால்கள் பின்னின;
தோள்களோடே தோள்கள் மிடைந்தன வாளோடு வாள் நெருங்கின; சின்னாட்
சில்பிணிமானிடனாகிய யான் அதனைச் சொல்லமுடியாது என்றார் என்க.
 

( 143 )

 

1274. குடைநில மறைப்பவுங் கொடிக1ள் போர்ப்பவு
மிடைநில மிருண்மெழுக் கிட்ட தாயிடைப்
படைநில விலங்கவும் 2பணிகண் மின்னவு
மிடைநில மிடையிடை யிலங்கித் தோன்றுமே.
    
 

     (பாடம்) 1 விட்டவே. 2காளையர்.