பக்கம் : 800 | | (இ - ள்.) குடைநில மறைப்பவும் - குடைகள் நிலத்தை மறைத்தலாலும், கொடிகள் போர்ப்பவும் - கொடிகள் மறைத்தலாலும், இடைநிலம் இருண்மெழுக்கிட்டது - அக்களத்தின் ஊடே இடையிட்ட நிலம் இருளால் மெழுகப்பட்டாற் போன்றிருண்டது; படை நிலவு இலங்கவும் - போர்க்கருவிகளின் ஒளி திகழ்தலாலும், பணிகள் மின்னவும் - அணிகலன்கள் மின்னுவதாலும், இடைநிலம் இடை இடை இலங்கித் தோன்றுமே - அப்போர்க்களத்திடையே சிற்சில இடம் ஒளியாற்றிகழும். குடை முதலியவற்றால் அப்போர்க்களத்தே இருள் உண்டாயிற்று; போர்க்கருவி முதலியவற்றால் ஒளியுமுடையதாயிற்று என்க. | ( 144 ) | | 1275. | கருப்புடைக் 3கைகளாற் புடைத்துக் கண்களு ணெருப்பொடு நெருப்பெதி ரெறிப்ப யானைகண் மருப்பொடு மருப்பிடை மிடைந்து மான்றரோ பொருப்பொடு பொருப்பவை பொருவ போன்றவே. | (இ - ள்.) கருப்புடைக் கைகளாற் புடைத்து - கரியநிறமுடைய தம் துதிக்கைகளாலே தாக்கி, கண்களுள் நெருப்பொடு நெருப்பு எதிர் எறிப்ப - தம் கண்களுள் சினத்தீப் பற்றி ஒன்றற்கொன்று எதிராக வீச, யானைகள் - போர்க்களிறுகள், மருப்பொடு மருப்பு இடைமிடைந்து - தம் கோடுகளோடு கோடுகள் செறிந்து, மான்று - மயங்கி, பொருப்பொடு பொருப்பு அவை - மலைகளோடு மலைகள், பொருவ போன்றவே - போர் ஆற்றுதலை ஒத்தன, (எ - று.) பொருப்பவை - அவை: பகுதிப் பொருளது. யானைகள் தம் கரிய கைகளாற் புடைத்தும் மருப்புகளாலே குத்தியும் மலையோடுமலை பொருதாற்போற் பொருதன என்க. | ( 145 ) | | 1276. | கறங்கெனக் காலசக் கரங்க டாமென மறங்கிளர் மன்னர்தம் மகுட நெற்றியு | | |
| (பாடம்)1 ளோப்பவும். 2 மணிகண். 3 கையளாற். | | |
|
|