பக்கம் : 801
 

 

  முறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த்
திறங்கிளர் புரவிக டிரிதர் கின்றவே.
 
     (இ - ள்.) கறங்கென - காற்றாடிகளைப் போன்றும், கால சக்கரம்தாம் என -
காலமாகிய சக்கரத்தைப் போன்றும், மறங்கிளர் மன்னர்தம் மகுடநெற்றியும் -
மறத்தன்மைமிக்க அரசர்களுடைய முடியணிந்த தலையின் மேலும், கடாக்களிற்று உச்சி
மேலும் - ஆண் யானைகளின் மத்தகத்தின் மேலும், திறங்கிளர் புரவிகள் - ஆற்றல்
சான்ற குதிரைகள், திரிதர்கின்றவே - திரிவனவாயின, (எ - று.)

காலசக்கரம் - இடையறாது இரவும் பகலுமாய் மாறிமாறிச் சுழலும் காலவட்டம். மறலியின்
சக்கரமுமாம். குதிரைகள் காற்றாடிபோன்றும், காலசக்கரம் போன்றும், அரசர் முடிமேலும்,
யானைகளின் உச்சிமீதும் சுழன்று திரிந்தன என்க.
 

( 146 )

 

1277. செம்பியல் கிடுகின செம்பொற் றட்டின
வம்புபெய் தூணிய வரவத் தேர்க்குழாம்
வெம்பிய கணைமழை விரவி வில்லொடு
வம்புபெய் மழைமுகில் பொருவ போன்றவே.
 
     (இ - ள்.) செம்புஇயல் கிடுகின - செம்பினால் இயன்ற கிடுகுடையனவும், செம்பொன்
தட்டின - செம்பொன்னாலியன்ற தட்டினை உடையனவும், அம்புபெய்தூணிய - அம்புகள்
செறிக்கப்பட்ட தூணிகளை உடையனவும், அரவத்தேர்க்குழாம் - முழங்குவனவுமாகிய
தேர்க்கூட்டங்கள், வெம்பிய கணைமழை விரவிவில்லொடு - வெம்புதற்குக் காரணமான
கணைமாரியோடுகூடி வில்லோடும், வம்பு பெய் மழைமுகில் புதுமையாகப்
பொழிதலையுடைய மழைமேகம், பொருவ போன்றவே - போர்புரிவனவற்றை ஒத்தன, (எ-
று.)

செம்பாலாய கிடுகுகளையும் செம்பொன்னாலாய தட்டினையும், அம்புக் கூட்டினையும்
உடைய தேர்க்கூட்டம் தம்பாலிருந்து கொடிய கணைமாரி பொழிதலால் முகில் வில்லோடு
தோன்றிப் போர்புரிவதை ஒத்தன என்க.
 

( 147 )

 

1278. இன்னவ ரின்னுழி யின்ன செய்பவென்
றென்னவ ரறிவுமங் கிடைபு காவகை
மின்னவி ரெஃகினு மிடைந்த வாளினு
மன்னவர் செருத்தொழின் மயங்கி யிட்டவே.