பக்கம் : 803
 
     (இ - ள்.) ஏற்றவர் - தம்மோடு போர் ஆற்றுதற்கு எதிர்ந்தவர், இமைப்பினும் - தம்
கண்களை இமைத்துவிட்டாலும், இகழ்ந்து -ஆண்மையற்றவர் என அவரை இளிவரப் பேசி,
எறிதல் செய்யார் - அவரொடு படைகளை வீசிப் போர் ஆற்றாதொழிவாராய், தோற்றவர் -
தம்மொடு போர்செய்து தோல்வியுற்றவர், புறக்கொடையும் நாணி - புறங்கொடுத்து
ஓடுதற்குத் தாமே நாணி; மிக நோக்கார் - அவர்பாற் போரின் மிக்குச் சேறலையும்
விரும்பாதவராய், வேற்றவரை - தம் பகைவர்களை, இது வீரநெறி காண்மின் என்று -
எமது ஒழுக்கமாகிய இது, மறவர்க்குரிய அறநெறியாம் என்று அறியுங்கோள் என்று,
தேற்றுவனர்போல் - தம் செயலாலேயே தெளிவிப்பார் போன்று, அவுணர் சென்று
திரிகின்றார் - சில விச்சாதரர் சென்று போர்க்களத்தே சுற்றித்திரிவர், (எ - று.)

“விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு“ (குறள் - 775)

என்பவாகலின் கண்ணிமைத்தாரையும் புறங்கொடுத்தாராகக் கருதி அவர்மேற்
படைவிடாராயினார் என்க. இன்னராகலின் தோற்றோடுபவர்க்குத் தாமே பெரிதும்
நாணுவாராயினர். மிக நோக்கல் - அவர் மேற் போர்த்தொடுத்தலைக் கருதுதல். அவுணர் -
விச்சாதரர். அவுணர் தானவர் என்பன விச்சாதாரரைக் குறிப்பனவாகச் சைன நூல்களுட்
காணப்படுகின்றன.
 

( 150 )

 

1281. தாருடைய 1மார்பினிடை 2சார்கணை குளிப்ப
வேரொடு 3பறித்தன ரெழுத்துவரி நோக்கிப்
பேரொடு4று பீடுடைய னாரென வினாவி
நேர்படுது மென்றுசிலர் 5நேடுபு திரிந்தார்.
 
     (இ - ள்.) தார்உடைய மார்பினிடை - மலர்மாலை யணிந்த தம் மார்பின் கண்ணே,
சார்கணை குளிப்ப - யாண்டிருந்தோ வந்தெய்திய அம்பு பாய்ந்து ஊடுருவிற்றாக,
வேரொடு பறித்தனர் - அவ்வம்பை முற்றும் தம் கையாற் பறித்து, எழுத்து வரி நோக்கி -
அவ்வம்பிற் பொறித்துள்ள எழுத்தாலாய முகவரியைப் படித்து, பேரொடு உறு பீடு
உடையன் ஆர் என வினாவி - போர் ஆற்றுதலிலே பொருந்திப் பெருமைமிக்க
இப்பேருடையன் யாவன் என்று அயனின்றாரை வினவி, நேர்படுதும் - அம்மெய்ம்
மறவனோடு யாம் போர் ஆற்றுதும், என்று - என்று கருதி, சிலர் நேடுபு திரிந்தார் - சில
மறவர்கள் அப்பெயருடையாரைத் தேடித் திரிவாராயினர்,
(எ - று.)
 

     (பாடம்) 1 மார்புபக. 2 வார்கணை. 3 பரிந்தன. 4 நன்காளையவனா ரென. 5 நாடுபு.