பக்கம் : 811 | | அரிசேனன் இறந்தமை தெரிந்தால் அச்சுவகண்டன் என் செய்யுமோ என்று அமரர் அஞ்சி ஓடினர் என்க. சடியின் மருகனாதலின், வியாக்கிரரதனை நெடிய மாற்கிளைய காளை என்றார். | (164) | அரிசேனன் வீழ்ந்தவுடன் அவன் படைஞர் நிலைமை | 1295. | அழலான்பெய ரவன்மைத்துன னரிசேனனை யெறியக் கழலான்கட லொளியான்றமர் கலந்தார்த்தனர் கரிய நிழலான்றமர் கரிந்தார் சில ரிரிந்தார்பலர் நெரிந்தார் தழலாரயில் வலனேந்துபு சார்ந்தார்தலை சரிந்தார். | (இ - ள்.) அழலான் பெயரவன் மைத்துனன் - அருக்க கீர்த்தியின் மைத்துனனாகிய வியாக்கிரரதன், அரிசேனனை எறிய - அரிசேனனைக் கொன்றவுடைனே, கழலான் - வீரக்கழலை அணிந்தவனும், கடல் ஒளியான் -கடல் வண்ணனுமாகிய திவிட்டனுடைய, தமர் - படைஞர்கள், கலந்து ஆர்த்தனர் - கூடி ஆரவாரித்தனர், கரிய நிழலான் தமர் - கருநிறமுடையவனாகிய அச்சுவகண்டனுடைய படைஞர்கள், சிலர் கரிந்தார் - சிற்சிலர் உளம் கருகினர், பலர் இரிந்தார் - பலர் புறங்கொடுத்தோடினர், நெரிந்தார் பலர் இறந்தார், தழல்ஆர் அயில்வலன் ஏந்துபு சார்ந்தார் - தீக்காலும் வேற்படையை வலக்கையின் ஏந்தி வியாக்கிரரதனை எதிர்த்தெய்தின பல மறவர்கள், தலை சரிந்தார் - தலைகள் வீழப்பெற்றார்கள், (எ - று.) அரிசேனன் மாண்டமை கண்டு திவிட்டநம்பியின் படைஞர் மகிழ்ந்து ஆரவாரித்தனர். அச்சுவகண்டன் படையிலுள்ளோர் இரிந்தாரும், நெரிந்தாரும், தலை சரிந்தாரும் ஆயினர் என்க. | (165) | | | 1296 | அரிசேனனங் கழிவாதல்கண் டயில்வாளொளி மிளிரா விரிசீர்வட்ட மிகுகேமடஞ் சுழலாநகு வருவான் | | |
|
|