போர் செய்யப்புகும் மறவர்கள் தங்கள் அரசற்கு வெற்றி சிறக்க என வாழ்த்துதல் மரபு. இம்மரபினைப் பின்னரும் காணலாம். புகரும் - உம் : இசைநிறை. |
( 167 ) |
இந்திர காமன் போர்க்கு வருதல் |
1298. | அருக்க கீர்த்திதன் பெருக்கம் வாழ்த்தியே திருக்கை வேலினா னெரிக்கு மாற்றலான். |
இது முதல் மூன்று செய்யுள்கள் குளகம் (இ - ள்.) அருக்க கீர்த்தி தன் - அருக்க கீர்த்தியினுடைய பெருக்கம் வாழ்த்தியே - சிறப்புக்களைப் புகழ்ந்து வாழ்த்திக்கொண்டு, திருக்கை வேலினான் - அழகிய கையிலே வேற்படையேந்தியவனாய், எரிக்கும் ஆற்றலான் - பகைவரைச் சுட்டெரிக்கும் பேராற்றல் உடையான், (எ - று.) எரிக்கும் ஆற்றலான் “முன்னிவந்தனன்“ என அடுத்த செய்யுளில் முடியும். இங்கு வருபவன் இந்திரகாமன் என்பவன் ; இவன் திவிட்டன் படையைச் சேர்ந்தவன் ; அப்படைக்கு அருக்ககீர்த்தி தலைவனாதலாலும் விச்சாதரனாகிய தனக்கு அருக்ககீர்த்தி அரசனாதலாலும், இவன் அருக்ககீர்த்தியை வாழ்த்திப் புகுந்தான் என்க. |
( 168 ) |
|
1299. | 1பொன்னங் குன்றவன் மின்னும் வாளினன் மன்னன் றோழனாம் முன்னி வந்தனன். |
(இ - ள்.) மின்னும் வாளினன் - சுடரும் வாளையுடைய, பொன்னங்குன்றவன் - சக்கிரவாளத் தலைவனாகிய, மன்னன் தோழனாம் - அருக்க கீர்த்தியின் அன்பனாவான், முன்னி வந்தனன் - போரின்கண் முற்பட்டு வந்தான், (எ - று.) இந்திரகாமன் அருக்க கீர்த்தியின் நண்பன். பொன்னங்குன்று - இமயமலை. ஈண்டு அம்மலையின் ஒரு பகுதியாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை உணர்த்திற்று. |
( 169 ) |
|
(பாடம்) 1 பொன்னுங். |