|
1300. | வந்த வன்பெய ரிந்தி ரன்னெனுங் கந்து கொல்களி றுந்து காமனே. |
(இ - ள்.) வந்தவன் பெயர் - அவ்வாறு வந்த வீரன் பெயர் யாதெனில், கந்துகொல் களிறு உந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும், இந்திரன் எனும் காமனே - இந்திரன் என்று சொல்லப்படும் காமன் என்பான் (எனவே இந்திரகாமன், என்றபடி,) (எ - று.) கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும் இந்திரன் பெயரோடு காமன் என்னும் பெயரும் இணைந்த இந்திரகாமன் என்றபடி. |
( 170 ) |
இந்திரகாமனும் குணசேனனும் போர் ஆற்றுதல் |
1301. | இருவ ரும்மெதிர் பொருதும் வேலையி னருகு 1நின்றவர் வெருவி 2யோடினார். |
(இ - ள்.) இருவரும் எதிர்பொருதும் வேலையின் - இருவரும் நேருக்கு நேராக நின்று போர் செய்துகொண்டிருக்கிற சமயத்தில், அருகுநின்றவர் - இவர்களிருவருக்கும் பக்கத்திலே நின்று கொண்டிருந்தவர்கள், வெருவி ஓடினார் - இவர்கள் செய்யும் கொடிய போரைக்கண்டு அஞ்சி ஓடினார்கள், (எ - று.) இந்திரகாமனும், குணசேனனும் எதிர்ந்து போராற்றத் தொடங்கியவுடன், அப்போரின் கொடுமை கண்டு அயனின்றா ரெல்லாம் அஞ்சி ஓட்டமெடுத்தனர், என்க. |
( 171 ) |
இந்திரகாமன் குணசேனன் தோள் ஒன்றனைத் துணித்தல் |
1302. | வாளி னாலொரு தோளை 3வீழ்த்தவோர் தோளி 4னாலவன் வாளை யிட்டனன். |
(இ - ள்.) வாளினால் ஒரு தோளை வீழ்த்த இந்திரகாமன் தன் வாளாலே குணசேனனுடைய ஒரு தோளை வெட்டித்தள்ள, ஓர் தோளினால் அவன் - எஞ்சிய ஒரு கையாலே அக்குணசேனன், வாளை யிட்டனன் - இந்திரகாமன் தோளின்மேல் தன் வாளை வீசினான், (எ - று.) |
|
|
(பாடம்) 1நின்றனர். 2யோடினர். 3வீழ்த்தொரு. 4னாலிவன். |