பக்கம் : 815
 

     இந்திரகாமன் குணசேனனுடைய தோளில் ஒன்றை வெட்டி வீழ்த்தினானாக
அக்குணசேனன் இந்திரகாமனுடைய தோளை வெட்டும் பொருட்டு எஞ்சிய ஒரு கையால்
வாளை வீசினன் என்க.
 

( 172 )

குணசேனனைக் கொல்லுதல்

1303. இட்ட வாள்கர
மொட்டித் தட்டிப்பி
னட்ட மாகென
வெட்டி 1வீழ்த்தினான்.
 
     (இ - ள்.) இட்டவாள் கரம் ஒட்டித் தட்டிப்பின் - குணசேனன் வீசிய வாளை அவன்
கையாற்பற்றிய இடத்தே தன் கிடுகாலே தடுத்து, நட்டம் ஆகென - இவன்
உயிரிழக்கக்கடவன் என்று, வெட்டி வீழ்த்தினான் - அக்குணசேனன் தலையைத் தன்
வாளாலே வெட்டித் தள்ளினான், இந்திர காமன், (எ - று.)

குணசேனன் வீசிய வாளைத் தன் கிடுகினாற் றடுத்து அவனுடைய தலையை இந்திர காமன்
வெட்டி வீழ்த்தினான் என்க.
 

( 173 )

வரசேனன் போர்க்கு வருதல்
 

1304. குணசேனன் வீழக் கண்டு
     கூற்றினுங் கொடிய நீரா
னிணைசேனை 2தன்னு ளுள்ளோ
     னியம்பிய களிப்பின் மிக்கான்
கணைசேர்ந்த தூணித் தோளான்
     கைச்சிலை பிடித்துக் கொண்டு
திணைசேர வருக வென்று
     வரசேனன் றிகழ்ந்து நின்றான்.
 
     (இ - ள்.) குணசேனன் வீழக்கண்டு - குணசேனன் என்பான் மடிந்து வீழ்ந்தமை
கண்டு, இணைசேனை தன்னின் உள்ளோன் - பொருந்திய அச்சுவகண்டன் சேனையில்
உள்ளவனாகிய வீரன், வரசேனன் - வரசேனன் என்னும் பெயருடையோன், கூற்றினும்
கொடிய நீரான் - மறலியினும் மிக்க கொடுமையுடையோன், இயம்பிய களிப்பின் மிக்கான் -
மறவுரைகளை வழங்குகின்ற வீரச் செருக்குமிக்கவன், கணைசேர்ந்த தூணித் தோளான் -
கணைகள் செறிக்கப்பட்ட அம்புக்கூட்டையுடைய தோளையுடையவன், கைச்சிலை
பிடித்துக்கொண்டு - தனது இடக்கையிலே வில்லைப் பற்றிக்கொண்டு, திணைசேர வருக
என்று - போர்க்களத்தே என்னோடு போர் செய்தற்கு எல்லீரும் ஒருங்கு சேர்ந்து
வாருங்கோள் என்று அறை கூவியவனாய், திகழ்ந்து நின்றான் - ஆற்றலால் விளக்கமுற்று
நிற்பானாயினான், (எ - று.)
 

     (பாடம்) 1வீழ்த்தினன், வீழ்த்தனன். 2தன்னுளுண்டோ - வியம்பிய களிப்புமாகி.