திணை - பூமி, ஈண்டுப் போர்க்களம். குணசேனன் மாண்டவுடன் வரசேனன் என்பான் களிப்பு மிக்கானாய்த் தோளானாய்ப் பிடித்துக்கொண்டு வருக என்று நின்றான் என்று இயைத்துக் கொள்க. |
( 174 ) |
வரசேனனைக் காமுகன் எதிர்தல் |
1305. | மற்றவ னிற்ப தோர்ந்து மதகளி றனைய காளை கொற்றவ னருக்க கீர்த்தி குணம்புகழ்ந் தாடிப் பாடிக் கற்றவன் கலைக ளெல்லாங் காமுக னென்னும் பேரான் பற்றிய வில்லு மம்பும் பாங்குடன் 1பரித்து வந்தான். |
(இ - ள்.) மற்றவன் நிற்பது ஓர்ந்து - இவ்வாறு அறைகூவி வரசேனன் நிற்றலை அறிந்து, கலைகள் எல்லாம் கற்றவன் - போர்க்கலைகள் முழுதும் கற்ற பெரியோன், மதகளிறு அனைய காளை - மதநீர்மிக்க ஆண் யானையை ஒத்த இளைஞன், காமுகன் என்னும் பேரான் - காமுகன் என்னும் பெயரை உடையோன் ஒருவன், கொற்றவன் அருக்க கீர்த்தி - தன் மன்னனாகிய அருக்க கீர்த்தியின், குணம் புகழ்ந்து பாடிஆடி - குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் கூத்தாடிக்கொண்டும், பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் - பற்றப்பட்டவில்லையும் அம்பறாத் தூணியையும் முறையோடே ஏந்தி அவ்வரசேனன் எதிரே வந்தான், (எ - று.) வரசேனன் வருதலைக் கண்ட காமுகன் அருக்ககீர்த்தியின் புகழைப் பாடிக்கொண்டும் மறச் செருக்கால் ஆடிக் கொண்டும் வந்து அவனை எதிர்த்தான் என்க. |
( 175 ) |
|
1306. | வில்லொரு கையி னேந்தி வெங்கணை குழைய வாங்கிச் சொல்லரு மாரி போலத் தொடுத்தவன் விடுத்த லோடு மல்லுறு காளை தன்மேல் வராமலே விலக்கி யிட்டுக் கல்லெனக் கலங்கி வீழக் கைச்சிலை கணையே றிட்டான். |
|
|
|
(பாடம்) 1 எதிர்த்த தன்றே. |