(இ - ள்.) எரிபோல்வன சுரிபங்கியொடு - தீப்பிழம்பு போன்ற சுருண்ட தலைமயிர்க் கற்றையோடே, இருள் போல் - இருட்டினை நிகர்த்த, இருள் மெய்யோடு - இருண்ட உடலோடே, அரிபோல் அதிர் - முகில்போல முழங்கி, அகல்வான் உற நிமிரா - விரிந்த விசும்பளாவ உயர்ந்த உருப்படைத்து, அடி புடையா அடிகளாலே நிலத்தை அதிரப்புடைத்து, பரிபோல்வன பிடியா - புரவிகள் போன்றவற்றைப் பற்றிப் பிடித்து, உடல் அடியா - தன் உடலிலேயே மோதிக்கொன்று, இடைபடுதேர் - இவற்றிடையே அகப்பட்ட தேர்களை, பொரிபோல் எழ உதையா - நெற்பொரிபோன்று துள்ளி எழும்படி காலாலே உதைத்து, இவன் வருகின்றது ஓர் பொலிவு - இவ்விஞ்சையன் போர் ஆற்றிவரும் ஓர் அழகு (இவ்வாறிருந்தது,) (எ - று.) (1308) எனவுரையா, பின்செல, விளியா (1309) பறியா, அவை கறியா, வாள் இடையிடையிட்டு உருவா, உயிர் பருகா, உருவா செறியா, (1310) நிமிரா அடிபுடையா, பிடியா, அடியா, உதையா, இவன் வருகின்றதொர் பொலிவே, என இயைத்துக் கொள்க. |
(இ - ள்.) ஆழிப்படை உடையான் தமன் - சக்கரப் படையை உடையவனாகிய அச்சுவகண்டன் படைஞனாகிய, அரிகேதனன் என்போன் - அரிகேதனன் என்னும் பெயரையுடைய இவ்விஞ்சையன், பாழிப்படை பொருவாரொடு - பெரிய படையோடே போர் செய்கின்ற வீரர்களுடன், பயில் போர் அலது அறியேன் - போர் ஆற்றுதலே அல்லால் வீண்பேச்சுப் பேசுதல் முதலியவற்றை யான் அறிந்தேனில்லை, ஏழைப்படை - எளிய மானிடப் படையாகிய, இதுவோ - இதுதானோ, எனக்கு எதிர் ஆகுவது - என்னுடன் எதிர்த்துப் போர் செய்யும் ஆற்றலுடையது, ஆயில் வாழி - அவ்வாறு ஆற்றலுடையதாயின் அது வாழ்க, படைபொருது என் - இவ்வேழைப் படையோடே போர் செய்தலால் எனக்கு வரும் புகழ்தான் யாது?, என - என்று, வையா - இகழ்ந்து பேசி, நனி வந்தான் - விரைந்து மேல் வருவானாயினன், (எ - று.) அவ்வாறு வந்த அரிகேதனன்; போர் செய்வதல்லது வீண் பேச்சுக்கள் பேச அறியேன்; இம்மானிடப்படை ஏழைப்படை; இதன்கண் எனக்கு நிகராய மறவர் இரார்; இவரோடு போர் செய்தலிற் பயன் என்னை! என்று இகழ்ந்து பேசிக்கொண்டு வந்தான் என்க. |