பக்கம் : 821
 

சார்த்தூலகன் அரிகேதனனை எதிர்தல்

1313. கள்ளாற்1 களி யிலனாலிகல் களமண்டிய செருவின்
உள்ளாற்களி யுற்றானிவ னுயிருண்கென வுருவி
நள்ளாதவர் தலைவவ்விய நகைவாளது வீசித்
தள்ளாதவ னெதிரேமிகு சார்த்தூலக னேற்றான்.
 
     (இ - ள்.) கள்ளாற் களியிலனால் - கள்ளுண்டானைப்போல இவன் பேசினும்
கள்ளுண்டு வெறிகொண்டானலன் இவ்வரிகேதனன், இகல் களம் மண்டிய செருவின்
உள்ளால் இவன் களியுற்றான் - போர் ஆற்றும் களத்தின்கண்ணே உண்டாகிய
போர்த்தொழிலாலே இவன் மறவெறி கொள்ளாநின்றான், இவன் உயிர் உண்கு -
இவனுடைய உயிரை யானே குடிப்பேன், என உருவி - என்று தன் வாளை உறை கழித்து,
நள்ளாதவர் தலைவவ்விய நகை வாள் அது வீசி - பல பகைவர்களின் தலைகளை
வெட்டிப் புகழ்கொண்டு திகழா நின்ற அவ்வாட்படையைச் சுழற்றிக்கொண்டு, தள்ளாதவன்
எதிரே - பகைவரை எதிர்த்தலை ஒழியாத அவ்விஞ்சையனுக்கு எதிரே, மிகு சார்த்தூலகன்
ஏற்றான் - ஆற்றல் மிக்க சார்த்தூலகன் என்பான் சென்று போர் ஏற்றான், (எ - று.)
அவ்வாறு இகழ்ந்து பேசிவந்த அரிகேதனனுக்கு முன்னர், சார்த்தூலகன் என்னும் வீரன்
வாளை உறைகழித்து வீசியவனாய்ச் சென்று அவனை எதிர்ந்தான் என்க.
 

( 183 )

அரிகேதனன் ஆற்றும் மாயப்போர்.

1314. வரையாலென முகிலாலென விருளாலென மறியும்
     திரையார்கட லளவேசெல விரியுந்நனி சிறுகும்
நிரையாமுகின் முடிதேய்தர நிமிருந்நில மிதனுட்
     புரையாரிட 2மறையும்மிது பொருகின்றதொர் பொலிவே.
விள்ளாதவர் சிலர் பின்செல விரல்வீளைகள் விளியா.
 
     (இ - ள்.) வரையால் என - மலைபோன்றும், முகிலால் என - மேகம் போன்றும,்
இருளால் என - இருள்போன்றும், மறியும் திரையார் கடல் அளவே செலவிரியும் -
மடங்கும் அலைககளையுடைய கடலின் அளவிற்றாகப் பேருருக்கொண்டு பரவுவான்,
நனிசிறுகும் - ஒருகால் அணுவினும் நுண்ணியனாய்ச் சிற்றுருக்கொண்டு சுருங்குவான்,
நிரையாம் முகில் முடிதோய்தர நிமிரும் - நிரல்பட்ட மேகங்கள் தன் முடியிலே தோயும்படி
வளர்வான், நிலம் இதனுள் - இப்பூமியின்கண்ணே உள்ள, புரையார் இடம் மறையும் - ஒரு
சிறிய வளையிடத்தேயும் மறைந்து விடுவான், இது பொருகின்றதோர் பொலிவு - இஃது
அவ்வரிகேதனன் போரிடுகின்றதோர் அழகாம், (எ - று.)
 

     (பாடம்) 1 களி யிலனா வதும். 2 மறியும் மிது.