பக்கம் : 822 | | ஆல்கள் : அசைகள். அரிகேதனன் வருகின்றதோர் பொலிவு அஃது, இஃது அவன் பொருகின்றதோர் பொலிவு என்க. மலைபோன்றும், முகில்போன்றும், இருள்போன்றும், கடல்போன்றும், விரிவான்; அணுவினும் சிற்றுருக்கொண்டு ஒருகாற் சுருங்குவான்; முகிலை முட்டும்படி பேருருக் கொள்வான்; சிறிய அளையினுட் சென்று மறைவான்; இவ்வாறு அவன் போர் செய்தான் என்க. | ( 184 ) | | 1315. | மாலைத்தலை வளர்மாமதி நிகரும்வளை யெயிறுஞ் சோலைத்தலை மலைபோல்வன தோளும்மிவை யுடையான் காலைத்தலை யிளஞாயிறு புரைவான்மிசை 1கதுவாச் சூலத்தலை நுதியாலவ 2னாகந்துளை யிட்டான். | (இ - ள்.) மாலைத்தலை வளர்மாமதி நிகரும் - மாலைக் காலத்தே தோன்றி வளரும் இயல்புடைய இளம்பிறையை ஒத்த, வளையெயிறும் - வளைந்த கோரப்பற்களும், சோலைத்தலை மலைபோல்வன தோளும் - பொழில்களைத் தம்மிடத்தேயுடைய மலைகளைப் போன்ற தோள்களும், இவையுடையான் - ஆகிய இவையிற்றை உடைய அரிகேதனன், காலைத்தலை இளஞாயிறு புரைவான் மிசை - காலைப்பொழுதிலே தோன்றும் இளைதாகிய ஞாயிற்று மண்டிலத்தை ஒத்த சார்த்தூலகன் மேலே, கதுவா - படுமாறு, சூலத்தலை நுதியால் - சூலப்படையின் தலையாகிய நுனியாலே, அவன் ஆகம் - அச்சார்த்தூலகன் மார்பிடத்தே, துளையிட்டான் - துளைத்தனன், (எ - று.) எயிறும் தோளும் உடையனாகிய அரிகேதனன், இளஞாயிறு புரைவான்மிசை கதுவா சூலத்தலை நுதியால் ஆகந் துளையிட்டான் எனக் கூட்டுக. | ( 185 ) | அரிகேதனனைச் சார்த்தூலகன் மாய்த்தல் | 1316. | இடுவானையவ் விடுசூலமொ டுடலும்மிரு துணியாப் படவீசின னயில்வாளது படலும்பல மாயன் 1அடைவாய்மையி 2னுருவம்முத லதுவேதன தாகத் தடமால்வரை யெனவீழ்தலு முடைவார்தம ரானார். | |
| (பாடம்) 1 யெறியாச். 2 னாகத்திடை.. 1அடவாமையி. 2 னுகுவாமுத. | | |
|
|