பக்கம் : 825 | | தூமகேதனனைச் சுவலனரதன் எதிர்தல் | 1319. | வண்டினம் பாடு மாலையன் 1விசித்த கச்சினன் வயிரப்பூ ணிரைத்த தண்டினன் கழலன் றமனியத் தாரான் சார்ந்தனன் சார்தலு மவனைக் 2கண்டன னன்றே கடலொளி மேனிக் காளைதன் மாமனுக் கிளையான் உண்டினி நமக்கோர் போரென வெதிரே யுவந்துசென் றவர்க்கிவை யுரைத்தான். | (இ - ள்) வண்டினம் பாடும் மாலையன் - வண்டுகள் இசைபாடும் மாலையை அணிந்தவனாய், விசித்த கச்சினன்-கட்டிய கச்சினையுடையனாய், வயிரப் பூண் நிரைத்த தண்டினன் - வயிரமணிப் பூண்களை நிரலாகச் செறித்த தடியை உடையவனாய், கழலன் - வீரக்கழல் அணிந்தவனாய், தமனியத்தாரான் - பொன்மாலை பூண்டவனாய், சார்ந்தவன் - வந்தவனாகிய அத்தூமகேதனன் என்பான், சார்தலும் - அவ்வாறு வந்து நின்றவுடனே, கடல் ஒளி மேனிக் காளை தன் மாமனுக்கு இளையான் - கடல் போன்ற நீல ஒளிபரப்பும் திருமேனியையுடைய திவிட்டன் மாமனாகிய சடியரசன் தம்பியாகிய சுவலனரதன் என்பான், அவனைக் கண்டனன் அன்றே - அத்தூமகேதனனைக் கண்டான், இனி - இப்பொழுது, நமக்கு - எனக்கு, ஓர் போர் உண்டு என - ஒரு சிறந்த போர்த் தொழில் கிடைத்தது என்று, உவந்து - மிக மகிழ்ந்து, அவற்கு எதிரே சென்று - அத்தூமகேதனனுக்கு முன்னர்ச் சென்று, இவை உரைத்தான் - இம்மொழிகளைக் கூறுவானானான். தூமகேதனனைக் கண்ட சுவலனரதன் என்பான் சிறந்த போர் ஒன்று நமக்கு வாய்த்தது என்று மகிழ்ந்து அவன் முன்னர்ச் சென்று பின்வருமாறு கூறினன், என்க. | ( 189 ) | 1320. | தூமகேதனனைச் சுவலனரதன் அசதியாடல் மலையெடுத் திடுவாய் மாநிலம் பிளப்பாய் மறிகட லறவிறைத் திடுவாய் உலைமடுத் துலகம் பதலையா வூழித் தீமடுத் துயிர்களட் டுண்பாய் | (பாடம்) 1 வரித்த கச்சையன். 2 கண்டிலனன்றே, கண்டலனன்றே. | | |
|
|