பக்கம் : 826 | | | | நிலையிடத் துளரோ நிகரெனக் கென்பாய் 1நின்றனை நிகருனக் காகித் தொலைவிடத் தல்லாற் சொல்லிவை நுங்கட் கொழியுமோ தூமகே தனனே. | (இ - ள்.) மலையெடுத்திடுவாய் - நீ மலைகளையும் தூக்குவாய் அது மாத்திரமோ செய்வாய்?, மாநிலம் பிளப்பாய் - பெரிய பூமியையும் பிளந்தே விடுவாய், மறிகடல் அற இறைத்திடுவாய் - அலைமடங்கு கடல்களையும் நீர்அற இறைத்தொழிப்பாய், உலகம் பதலையா - பூமியைப் பானையாய்க்கொண்டு, உலைமடுத்து - உலையேற்றி, ஊழித்தீ மடுத்து - ஊழித்தீயையும் கொளுவி, உயிர்கள் அட்டு உண்பாய் - உயிர்கள் முழுதையும் ஒரு சேரச் சமைத்துத் தின்னவும் தின்பாய், எனக்கு நிகர் நிலையிடத்து உளரோ என்பாய் - இப்போர்க்களத்தே எனக்குச் சமமாகும் வீரரும் உளரோ என்று வியப்பாய், நின்றனை - இவற்றில் ஒன்றேனும் செய்யாது நிற்கவும் நிற்பாய், தூமகேதனனே - புகைக்கொடிப் புல்லியோய்!, நிகர் உனக்கு ஆகி - உனக்கு நேர் பொருவார் உளராகி, தொலைவிடத்தல்லால் - நீ அவர்க்கு ஆற்றாது புறங்கொடுத்து ஓடுமிடத்தே ஒழிவதல்லால், சொல்லிவை நுங்கட்கு ஒழியுமோ - உன்னைப் போன்றவர்கட்கு இவ் வீண்சொற்கள் ஒழிவனவல்லவே, (எ - று.) சுவலனரதன் தூமகேதனன் கூறிய மொழிகளையே அநுவதித்து அவனை அசதியாடி நகுகின்றான் என்க. இவ்வாறு நும் போல்வார் வீரம் பேசுவது ஒருசிறந்த வீரனை எதிர்த்துப் போராடுகின்ற வரையிற்றான் என்று இகழ்கின்றான். சிறந்த வீரர் இவ்வாறு வாயாற் கூறார் என்பது கருத்து. | ( 190 ) | தூமகேதனன் சுவலனரதனை இகழ்தல் | 1321. | என்றலு மதுகேட் டெரியுடைத் தேரோ னென்பவ னாமிவ னென்றே நன்றுநன் றென்று நக்கன னக்கே நாணிலர் நம்மலை வாழ்வார் இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா யென்றன னினையன மொழியாக் குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் றண்டுகை வலித்தே. | (இ - ள்.) என்றலும் - என்று சுவலனரதன் கூறலும், அது கேட்டு - அவ்வாசகத்தைத் தூமகேதனன் கேட்டு, இவன் - இவ்வீரன் எரியுடைத் | |
| (பாடம்) 1 நின்றனன். | | |
|
|