பக்கம் : 827
 

     தேரோன் என்பவனாம் என்றே - சுவலனரதன் என்பான் என்று அறிந்து
கொண்டவனாய், நன்று நன்று என்று நக்கனன் - நன்று நன்று என்று கூறி இகழ்ந்து
சிரித்து, நம்மலை வாழ்வார் நாணிலர் - மலையிடத்தே வாழும் விஞ்சையர் பெரிதும்
நாணமற்றவராய் விட்டனர், இன்று எனக்கு எதிராய் நீ கொலோ பொருவாய் - இற்றைப்
போரில் நீதானோ என்னை எதிர்த்துப் போர் செய்ய வந்தாய், என்றனன் - என்று
இகழ்ந்தவனாய், இனையன மொழியா - இன்னோரன்ன மொழிகளைப் பலபடப் பேசி,
குன்றினும் பெரியான் - மலையைவிடப் பெரிய உருவம் உடையவனும், கூற்றினும்
வெய்யோன் - மறலியினும் மிக்க கொடுமையுடையோனும் ஆகிய தூமகேதனன், தண்டு
கைவலித்துக் கொண்டனன் - ஒரு தடியைத் தன் கையால் இறுகப் பிடித்துப் போரை
மேற்கொண்டான், (எ - று.)

     சுவலனரதனும், மலையில் வாழும் விஞ்சையன், ஆதலால், விஞ்சையன் ஒருவன்
மனிதர் பொருட்டு மற்றொரு விஞ்சையனோடு பொருதல் நாணுடைத் தென்பான் -
நம்மலைவாழ்வார் எனச் சுவலனரதனையும் உளப்படுத்தி உரைத்தான். நாணமும் மறமுமற்ற
விஞ்சையனாகிய உன்னையோ யான் பொருது கொல்ல நேர்ந்தது என்பான், நீகொலோ
பொருவாய் என்றான் என்க.
 

( 191 )

இருவரும் போர் ஆற்றும் திறம்

1322. இன்றெனக் 1கெதிராய் நீகொலோ பொருவா
     யென்றிகழ்ந் துரைத்தனை யேடா
நின்றெனக் 2கெதிரா நீர்மையர் நின்போ
     னிரம்பவாய் திறந்துரைப் பவரோ
என்றன னெனலு மெதிர்தெழித் தவனு
     மெழுந்தன னெழுந்தன னிவனும்,
அன்றுபோர் மலைந்தா ரதிர்ந்ததிவ் வுலக
     மமரொழித் தரசரு நின்றார்.
 
     (இ - ள்.) இன்று எனக்கு எதிராய் நீ கொலோ பொருவாய் என்று - இற்றைப்போரில்
எனக்கு நேர்நின்று போர் செய்ய நீதானோ கிடைத்தனை என்று, இகழ்ந்து உரைத்தனை -
இளிவரவுறப் பேசினாய், ஏடா - அடே தூமகேதனா, நின்று - அஞ்சாதே நின்று, எனக்கு
எதிராம் நீர்மையர் - எனக்குப் பகையாய் எதிர்க்கும் மறத்தன்மையுடைய வீரர், நின்போல்
- பேதையாகிய நின்னைப்போல, நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ - மிகையாக வாயை
அகலப் பிளந்துகொண்டு தற்புகழ்
 


     (பாடம்) 1கெதிரான். 2 கெதிராய் நீர்மையா.