பக்கம் : 829
 

     மெய் ஆல் : மனம் ஆல் - ஆல் இரண்டும் அசைகள். விசும்பினை : வேற்றுமை
மயக்கம்.

திசைகள் எதிரொலி செய்யவும், பூமி அதிரவும், கடல் கலங்கவும் துறுகல் புரண்டு வீழவும்,
தண்டாற் புடைத்தும், தாங்கியும், வாங்கியும், தடுத்தும், உடல் வெயர்க்க மனம் வெம்ப
விசும்பில் திரிந்தனர்; என்க.
 

( 193 )

இதுவுமது

1324. 1கண்டவர்க் கெல்லாங் கண்ணுளார் போல்வார்
     காண்டலுக் கரிதவ ருருவம்
தண்டின 2தொலியுந் தங்களார்ப் பிசையுந்
     தயங்குதா 3ராரமும் விரவி
எண்டிசை மருங்கு மிடைநிலத் திடையு
     மிருள்கெழு விசும்பின தகமுங்
கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல்
     கூற்றமுந் தலைபனித் ததுவே.
 
     (இ - ள்.) கண்டவர்க்கு எல்லாம் - தம்மைப் பார்த்தோர்க்கெல்லாம், கண்ணுளார்
போல்வார் - அவரவர் கண்களிடத்தே உள்ளாரைப் போன்று அணுக்கராய்க் காணப்படுவர்,
அவர் உருவம் காண்டலுக்கு அரிது - விரைவு மிகுதியால் அவ்வீரர்களுடைய உருவங்கள்
நன்கு காண்பதற்கு அரியவாயின, தண்டினது ஒலியும் - அவர்கள் பற்றியுள்ள தடிகள்
தாக்கும் முழக்கமும், தங்கள் ஆர்ப்பிசையும் - அவ்வீரர்தாமே ஆரவாரிக்கும் முழக்கமும்,
தயங்குதார் ஆரமும் - திகழ்கின்ற மணிவடங்களும் முத்தாரங்களும், விரவி - கலந்து,
எண்டிசைமருங்கும் - எட்டுத் திக்குகளிடத்தும், இடைநிலத்து இடையும் - இவற்றிடைப்பட்ட
நிலத்தின் மீதும், இருள்கெழு விசும்பினது அகமும் - இருள் செறிந்த வானத்தினும், சிலம்பு
கொண்டன - பெருமுழக்கம் செய்தன, விலங்கல் குலுங்கின - மலைகள் அசைந்தன,
கூற்றமும் தலைபனித்தது - மறலியும் அச்சத்தால் தலைநடுக்கமுற்றான், ஏ : அசை, (எ -
று.)

     தம்மைப் பார்த்தவர்கள் கண்களூடே உள்ளார் போல்வர், அவர் உருவம்
காண்டற்கரிய, கூற்றமும் நடுங்கிற்று என்க.
 

( 194 )


     (பாடம்) 1கண்டிவர்க். 2தொளியர். 3ரார்வமும்.