(இ - ள்.) கணிகொண்டு அலர்ந்த - காலங் கணித்தற்றொழிலை மேற்கொண்டு மலராநின்ற, நறவேங்கையோடு - தேன் பொதுளிய வேங்கை மலரினோடே, கமழ்கின்ற காந்தள் இதழால் - நறுமணங் கமழ்கின்ற காந்தட்பூவாலே, அணிகொண்டு அலர்ந்த வனமாலை - புனைதற்றொழிற் சிறப்பையும் உடையதாய் மலர்ந்துள்ள அழகிய மலர்மாலையை, சூடி - அணிந்து, அகில் ஆவி குஞ்சிகமழ - அகிலால் ஆய மணப்புகை தன் தலை மயிரிடத்தே கமழாநிற்ப, மணிகுண்டலங்கள் - மணிகள் அழுத்திய குண்டல அணிகள், இருபாலும் வந்து - இரண்டு பக்கங்களிலும் வந்து, வரை ஆகம் மீது திவள - மலை போன்ற தன் தோள்களின் மிசையே புரளா நிற்ப, துணிகொண்டு இலங்கு - துணிவை மேற்கொண்டு விளங்கும், சுடர்வேலினோடு - சுடருகின்ற வேற்படையோடே, வருவான் - வாராநின்றான், இது என்கொல் துணிவு - இத்துணிவினது தன்மைதான் எத்தன்மைத்தோ, (எ - று.) வேங்கை மலருங்காலம் தினை கொய்தற்குரிய காலம் என்று, காலத்தைக் கணிப்பராகலின, வேங்கை கணித்தொழில் கொண்டலர்ந்த தென்றார். சூடி, கமழ, திவள, வேலினோடு வருவான், இவன் துணிவுதான் எத்தகையதோ ! என்று, அழல்வேகன் வருகையைக் கண்டோர் வியந்தனர், என்க. |
(இ - ள்.) அருமாலை வேல்வல் அழல்வேகன் ஆகும் - பெறற்கரிய வெற்றி மாலையையுடையவனும் வேற்படை கொண்டு போர் ஆற்றுதலிலே வல்லவனும் ஆகிய, அழல் வேகன் என்னும் வீரன் போலும் ஈண்டு வருவோன், அவன் ஆயில் ஆக - அவ்வழல்வேகனே ஆயின் நன்று ஆகுக, அமைக - எனக்கு எதிராக அவன் அமைக, இவன் என்னோடு ஏற்க - இவ்வழல் வேகன் என்னோடு போர் ஆற்றக் கடவன், ஆதலின் - எரிமாலை வேல்வல் இளையார்கள் நிற்க - சுடர் ஒழுங்குற்ற வேற்படை வல்லுநரான நம் இளைஞராகிய வீரர்கள் ஈண்டே நிற்பாராக, எனவே - |