பக்கம் : 833 | | என்று கூறி, பொருமாலை வாளன் - போர் செய்யும் தன்மையுடைய வாளை ஏந்தியவனாய், அணிகேடகத்தன் - அழகிய கிடுகுடையனாய், மணிபோது இலங்கு முடியன் - மணிகளும் மலர்களும் திகழ்கின்ற முடிக்கலனை உடையவனாய், செருமலை மன்னர் இறை - வெற்றி மாலை சூடுமன்னர் மன்னனாகிய, தேவசேனன் - தேவசேனன் என்பான், சிவந்து எதிரே செல - சினந்து அவ்வழல் வேகனுக்கு எதிரே செல்லா நிற்க, ( ) அழல்வேகன் - அச்சுவகண்டனைச் சேர்ந்தவன்; தேவசேனன் - சடிமன்னன் மைத்துனன். அழல்வேகன் வருகையைக் கண்டு தேவசேனன், இவன்றான் அழல்வேகன் என்னும் புகழ்பெற்ற வீரன் போலும், அவனாயின் நன்று அவனோடு யானே எதிர்ப்பேன் என்று சிவந்து எதிரே வந்தான் என்க. | ( 198 ) | அழல்வேகன் தேவசேனனை இகழ்ந்து அச்சுறுத்தல் | 1329. | மலைமேலு மென்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் நிலமேலு நின்று பொருவா னினைந்து வருவாய் நினக்கி 1துறுமே சலமேலு மின்ன வுடையாயை வென்று தலைகொண்ட பின்னை நுமரைக் குலம்வேர் களைந்து குடிபொன்று விப்ப னிதுயான் மகிழ்ந்த குணனே. | (இ - ள்.) மலைமேலும் என்னை மதியாது வாழ்தி - அடே தேவசேனா நீ, இரதநூபுரச் சக்கரவாளத்தின்மிசை யிருக்கும் பொழுதும் என்னைப் பொருளாக மதியாமல் செருக்குடனே வாழ்ந்தனை, மேலும், மனிசர்க்குப் படையாய்வந்து - எம்பகைவராகிய எளிய மானிடர்க்கும் துணைப்படையாய் வந்து, நிலமேலும் நின்று - இந்நிலத்தின் மேலும் என்னை மதியாது எதிர் நின்று, பொருவான் - போர் செய்ய, நினைந்து வருவாய் - எண்ணி வந்தனை, நினக்கு இது உறுமே - உனக்கு இது தகுதியாமோ, சலம் மேலும் இன்ன உடையாயை - வஞ்சனை மேலும் இன்னோரன்ன பல உடையையாகிய உன்னை, வென்று தலைகொண்ட பின்னை - இற்றைப் போரின்கண்வென்று உன் தலையைக் கைக்கொண்ட பின்னர், நுமரை - உனது கேளிரை, குலம் வேர் களைந்து - குலத்தோடு வேர்களைந்து, குடிபொன்றுவிப்பன் - உன்குடி முழுதும் கொன்று அழிப்பேன், இது யான் மகிழ்ந்த குணன் ஏ - இது யான் மகிழ்வதற்குரிய செயலாகும், (எ - று.) | |
| (பாடம்) 1 துறுமோ. | | |
|
|