பக்கம் : 835 | | அவர்களின் போர்த்திறம் | 1131. | வாள்வீசு மாறும் 1வடிவேலின் வந்த வடிவேல் 2விலங்கும் வகையும் தோள்வீசு மாறு மவைமீளு மாறு மிடைசொல்லும் வீர மொழியும் தாள்வீசு போழ்து கழலோங்கு மாறு மெதிர்தாங்க ளார்க்கு மொலியுந் 3நாள்வீய லன்றி யுரைவீய யாவர் 4நவில்வார் நமக்கு மரிதே. | (இ - ள்.) வாள் வீசும் ஆறும் - இந்த இரண்டு மறவர்களும், தத்தம் வாள்களை வீசுகின்ற வகையும், வடிவேலின் - வடித்த வேலாலே, வந்த வடிவேல் விலங்கும் வகையும் - தம் மேல் வந்த வடிவேலை விலக்கா நின்ற வகையும், தோள்வீசும் ஆறும் - தத்தம் கைகளை வீசுகின்ற வகையும், அவை மீளும் ஆறும் - அக்கைகளை மீள மடக்கும் விதமும், இடை சொல்லும் வீரமொழியும் - இப்போரிடையே இருவரும் பேசுகின்ற மறவுரைகளும், தாள்வீசு போழது - கால்களை வீசும்பொழுது, கழல் ஓங்கும் ஆறும் - வீரக்கழல்கள் உயர்கின்ற வகையும், எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும் - ஒருவர்க்கொருவர் எதிர்எதிர் எடுக்கும் ஆர்ப்பொலியும், நாள்வீயல் அன்றி உரைவீய - காலங் கழிவதொழித்து மொழி முற்றும்படி, யாவர் நவில்வார் - யாரோதான் கூறவல்லுநர் ஆவர், நமக்கும் அரிதே - ஆதலால் எமக்கும் கூறல் அருமையாயிற்று, (எ - று.) தேவசேனனும், அழல்வேகனும் ஆற்றிய போர்த்திறத்தை உள்ளபடி சொல்லப்புகின், காலம்மிக வேண்டும் ; எத்தனை காலம் கூறினும், அப்போர்ப் பெருமை முழுதும் கூறவியலாது, எனவே, எமக்கும் அதனைக் கூறுதல் அரிதே ஆயிற்று ; எனத் தேவர் கூறினர் என்க. | ( 201 ) | | 1132. | மாலா லெதிர்ந்து மலைவாயை நீடு பொர5வைப்ப தென்னை யினியென் வேலா லழிப்ப னெனவே லெறிந்து விறல்வேக னார்ப்ப மறவோன் | | |
| (பாடம்)1 வடிவேலினாலிவ், வேலினாலவ். 2 விளங்கும். 3 நாள் வீசி யின்றி. 4 மொழிவார். 5வேண்டிவைப்ப தினியென். | | |
|
|