(இ - ள்.) எய்வேல் அறுத்து - எய்தவேலை இவ்வாறாகத் துணித்து, வறியானை நோக்கி - படைக்கலம் இழந்து வறுங்கையொடுநின்ற அழல்வேகனை இரக்கத்தோடே பார்த்து, எறியாது நிற்ப - தேவசேனன் அவன்மீது படைஒன்றும் வீசாதவனாய் நிற்க, அவன் - அவ்வழல்வேகன், ஓர் நெய்வேல் - ஒரு நெய் பூசப்பட்ட வேற்படையை, பெயர்த்து நிருமித்து - மீளவும் படைத்துக்கொண்டு, அஃதேந்தி - அப்புதிய வேலைக் கையிலே பற்றி, உருமொத்து - இடியேற்றைப் போன்று, நேர்ந்து பொருவான் - தேவசேனனோடு எதிர்த்துப் போர் செய்யும் பொருட்டு, வெவ்வேல் தெருட்டி - அவ்வெவ்விய வேலைத் திருந்தக்கொண்டு, ஒரு தோள் நிமிர்த்தி - ஒரு கையை உயர்த்தியவனாய், விரல் ஒன்று சுட்டி - ஒரு விரலாலே இலக்காகிய தேவசேனனைச் சுட்டிக் காட்டியவனாய், வரவே - அணுகிவர, அம்மறவோன் - அந்த வீரனாகிய தேவசேனன், வைவேலினோடும் - அவனுடைய கூரிய வேற்படையோடே, நிமிர்கின்ற தோளை - உயர்த்திய கையை, அற வீசினான் - அற்று வீழும்படி தன் வாளாலே வெட்டினான், (எ - று.) படையிழந்து நிற்பார் மேல் படைவிடுதல் மறவர்க்கு அறமன்றாகலின், தேவசேனன், வறிதே எதிர்நின்ற அழல்வேகன்மேற் படை தொடாது நின்றான். அப்பொழுது அழல்வேகன் வேறு ஒருவேலால் தேவசேனனை எறிய வரவே அவ் வேலுடன் அவன் றோளையும் துணித்தான், என்க. |