பக்கம் : 839 | | தடுத்து, தேவசேனன் இது மொழியும் - தேவசேனன் இம் மொழிகளைப் பேசினன், கைஉற்றது ஒன்று - அடே அழல்வேக! உனக்கு ஒரு கை எஞ்சி உளதாயிற்று, கவலேல் - கவலைப்படாதேகொள், உனக்கு இது உறுமாறு - உனக்கு இவ்வொரு கையேனும் உளதாம்படி, போக எனவும் - நீ ஓடிப்போய்விடு என்று கூறிய பின்னரும், மையுற்ற காளை - மயக்குற்றவனாகிய அழல்வேகன், வருவானை - தன்மேற் போர் செய்யவே வருகின்றவனை, அம்மறவோன் - அத்தேவசேனன், வாளின் உயிர் வௌவினான் - வாளாலே கொன்று வீழ்த்தினான், (எ - று.) ஒரு தோளிழந்து நின்றவனாகிய அழல்வேகனை நோக்கித் தேவசேனன் இரக்கமுடையவனாய் இவ் வொருகையோடேனும் நீ போய் விடுக என்று மொழிந்தான், அழல்வேகன் மையலுற்று மற்றொரு கையால் போர் செய்யப்புகுந்தான் ஆதலின் அவனைக் கொன்று வீழ்த்தினான் என்க. | ( 204 ) | சுவணகேது போர்க்கு எழுதல் | 1335. | தாம மார்ந்த மணியைம்பாற் றைய றாதை 1மைத்துனனாஞ் சேம மார்ந்த தனிச்செங்கோற் றேவ சேனன் 2கைவாளாற் சாம வண்ணன் றழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த 3பொழுதத்தே தூம மாரங் கமழ்குஞ்சிச் சுவண கேது 4தோன்றின னால். | (இ - ள்.) தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல்தாதை - மலர்மாலை பொருந்திய நீலமணி போன்ற நிறமுடைய அளகக் கற்றையை உடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய, மைத்துனன்ஆம் - மைத்துனன் ஆகின்ற, சேமம் ஆர்ந்த தனிச் செங்கோல் - காவற்றொழில் நன்கமைந்த ஒப்பற்ற செங்கோன்மைச் சிறப்புடைய, தேவசேனன் - தேவசேனனுடைய, கைவாளால் - கையின் கண்ணதாகிய வாட் படையாலே, சாமவண்ணன் - இருள்நிறமுடையனாகிய, தழல்வேகன் - அழல்வேகன் என்பான், சாய்ந்தான் - இறந்தான், சாய்ந்தபொழுதத்தே - அவன் இறந்து வீழ்ந்தவுடனே, தூமம் ஆரம்கமழ் குஞ்சி - நறுமணப்புகையும் சந்தனமும் கமழ்கின்ற தலைமயிரையுடைய, சுவணகேது - சுவணகேது என்னும் வீரன், தோன்றினன் - போர் செய்யப் புகுந்தான், (எ - று.) | |
| (பாடம்) 1மைத்துனன். 2செங்கை வாளால். 3பொழுதகத்தே. 4தோன்றினான். | | |
|
|