பக்கம் : 841
 

சுவணகேதுவினைச் சடிமன்னன் எதிர்தல்

1337. என்னா விரண்டு மருங்1கினுமற்
     றிளநல்யானைக் குழாஞ்சூழப்
பொன்னார் தேரும் 2புரவிகளு
     மிடைந்து பூமி பொறைகூர
முன்னாற் செல்ல வருவானை
     முந்நீர் வண்ணன் றன்மாமன்
மின்னார் விளங்கு விறல்3வேலான்
     கண்டே வெகுண்டு மேற்சென்றான்.
 
     (இ - ள்.) என்னா - என்று சூள் மொழிந்து, இரண்டு மருங்கினும் - தன்
இருபக்கத்தும், மற்று, இளநல்யானைக் குழாம்சூழ - இளமை மிக்க நல்ல யானைக்
கூட்டங்கள் சூழ்ந்து வர, பொன்ஆர் தேரும் புரவிகளும் - பொன்னாலியன்ற தேர்களும்
குதிரைகளும், மிடைந்து - நெருங்குதலாலே, பூமிபொறை கூர - நிலம் சுமை மிகுதியால்
வருந்த, முன்னாற் செல்ல வருவானை - தன் முன்னர்ப் போர்க்குப் போக வருகின்ற
சுவணகேதுவை, முந்நீர்வண்ணன் தன் மாமன் - திவிட்டன் மாமனும், மின்ஆர்
விளங்கும்விறல்வேலான் - ஒளி பொருந்தித் திகழும் வெற்றி வேலையுடையோனுமாகிய
சடிமன்னன், கண்டு - பார்த்து, வெகுண்டு - சினங்கொண்டு, மேற் சென்றான் - அவன்
பாற் போர் செய்யச் சென்றான், (எ - று.)

     அவ்வாறு சூளுற்று வருகின்ற சுவணகேது என்பானைச் சடி மன்னன் கண்டு சினந்து
அவன் எதிரேசென்று தடுத்தான் என்க.
 

( 207 )

 

1138. கானற் புரவி கலிமாவோ
     டெதிர்ந்த கருங்கை 4மதவேழ
மான யானை தம்மோடே
     மலைந்த தேரு மாறேற்ற
ஈன மில்லா விளையாரோ
     டிளையார் திளைத்தா ரிவ்வகையே
தானை 5தம்முட்டாக்கலுறத்
     தாமுந் தம்முட் டலைப்பெய்தார்.
 
     (இ - ள்.) கால்நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த - கால்களாலே நல்லனவாகிய
குதிரைகள் கனைக்கின்ற குதிரைகளோடு எதிர்த்தன, கருங்கை மதவேழம் - கரிய
துதிக்கையையுடைய மதம் பொழிகின்ற யானைகள், மானயானை தம்மோடே மலைந்த -
மானம் போற்றும் யானைகளோடே போர் செய்தன, தேரும் மாறுஏற்ற - தேர்களும் தம்
பகைத்தேர்களோடே எதிர்த்தன, ஈனமில்லா இளையாரோடு இளையார் திளைத்தார் -
குற்றமற்ற
 

     (பாடம்)1 கினுமிளநல்யானை. 2 புரவி. 3 வேலினான். 4 வேழமும்.
5 தம்முட்டாக் கினமுன் றம்முட் போருட் டலைப் பெய்தார்.