பக்கம் : 842 | | காலாள் மறவரோடே காலாள் மறவர் போராற்றினர், இவ்வகையே - இவ்வாறே, தானை தம்முள் தாக்கால் உற - அப்படைகள் தமக்குள்ளே போரிட, தாமும் தம்முள் தலைப்பெய்தார் - தலைவராகிய சுவணகேதுவும் சடிவேந்தனும் தமக்குள் போர் ஆற்றலை மேற்கொண்டனர், (எ - று.) மானம் போற்றலாவது - “புதையம்பிற் பட்டும் பாடூன்றல்’ அப்பொழுது இருதிறத்துப் படைகளும், யானையோடு யானையும், குதிரையோடு குதிரையும், மறவரோடு மறவரும், தேரோடு தேருமாக எதிர்ந்து போர் செய்யாநிற்பத், தலைவரிருவரும் எதிர்ந்தனர், என்க. | ( 208 ) | சுவணகேது சடிமன்னனைப் புகழ்வான் போன்றிகழ்தல் | 1339. | அருவி யிலங்கு மதயானை யனல வூன்றி யணைபோழ்திற் குரவ ரோடு படைபொருதல் கூடிற் றன்று குலவேந்தே பொருவ ரென்னப் படுவாரங் கொருவர் போந்து 1பொரவொருவ ரொருவி நிற்ற லுரங்கொல்லோ வென்றா னுவண மேந்தினான். | (இ - ள்.) அருவி இலங்கும் மதயானை - மதநீர் அருவியாகப் பெருகித் திகழும் யானையை, அனல ஊன்றி - சினக்க எதிரே கடாவி, அணைபோழ்தில் - சடிமன்னன் சுவணகேதுவினை அணுகியபொழுது, குரவரோடு படைபொருதல் - குரவர் ஆவாரொடு படைக்கருவிகொண்டு போரிடுதல், கூடிற்றன்று - வீரர்களுக்குப் பொருந்துவதன்றாம், குலவேந்தே - உயர்குலத்து மன்னனே, பொருவர் என்னப்படுவார் - போர் மறவர்கள் என்று சிறப்பித்துக் கூறப்படுவோர் இருவருள், அங்கு ஒருவர் போந்து பொர - அப்போர்க்களத்தே ஒருவர் வந்து போர்செய்யா நிற்பவும், ஒருவர் ஒருவி நிற்றல் - மற்றொருவர் இப்போர் தக்கதன்றென்று வாளா நிற்றலும், உரங்கொல்லோ - ஆண்மையாகுமோ?, என்றான் - என்று சடிமன்னனைத் தடுத்தான், சுவணம் ஏந்தினான் - சுவணக்கொடியோன், (எ - று.) நீயோ என்னோடு போரிடவருதி என்று சடி ஆண்டான் முதிர்ந்தமையைச் சுட்டிக்காட்டி எமக்குக் குரவர் ஆவீர் உம்மொடு பொருதல் அறமன்று என்று சுவணகேது, இகழ்கின்றான். குலவேந்தே என்றது விஞ்சையனுக்குப் பெண்கொடாமல், கீழ்மகனாகிய மானிடற்குப் பெண் கொடுத்தாய் என்று இகழ்ந்தபடி. | ( 209 ) |
| (பாடம்) 1போர் பணித்தந். கொருவி நிற்ற லுறுங்கோலோ வென்றான் சுவணம் ஏந்தினான். | | |
|
|