பக்கம் : 844
 

 

  வேக யானை செலவுந்திச்
     சிறுநா 1ணெறிந்து வெஞ்சரங்கண்
மாக மெல்லா முடனடுங்கத்
     தொடங்கி னானம் மழைபோல்வான்.
 
     (இ - ள்.) ஆக - அவ்வாறாயின் ஆகுக, அமைக - அஃதமைவதாக, அதுவே
அரசநீதி ஆகிவிடில் - அதுவே அரசர்க்குரிய அறமாய் விட்டால், போக - போவதாக.
பொருவன் என - நான் இப்போது உன்னுடனே போர் செய்யா நிற்பேன் என்று
வாய்தந்தன பிதற்றி, புகைந்து - உள்ளம் புகைந்து, பொரு வெஞ்சிலை ஒன்று இடன் ஏந்தி
- போர் செய்தற்குரிய வெவ்விய வில் ஒன்றனைத் தன் இடக்கையின் ஏந்தி, வேக யானை
செல உந்தி - சினமிக்க யானையை முன் செல்லக் கடாவி, சிறு நாண் எறிந்து - வில்லினது
சிறிய நாணைத் தெறித்து, வெஞ்சரங்கள் - வெவ்விய அம்புகளை, மாகம் எல்லாம் உடன்
நடுங்க - திசைகள் நடுங்கும்படி, தொடங்கினான் - தொடுக்கத் தொடங்கினான், அம்மழை
போல்வான் - அம்புமாரி பெய்யும் மழையை நிகர்த்த அச்சுவணகேது, (எ - று.)
சடிமன்னன் மொழிக்குத் தகுந்த மறுமொழி கூற வகையின்றி ஆக, அமைக, அதுவே போக,
வென்று சுவணகேது பிதற்றினான் என்க.
 

( 211 )

சுவணகேதுவின் விற்போர் மாண்பு

1342. தொடங்கு கின்ற சுடுசரங்கள்
     சுருங்கி யொருகை செவிகாறும்
முடங்கு மொருகை சிலைவளையா
     2முடுக்குங் கண்ட தித்துணையே
இடங்க ளின்றி விசும்பெல்லா
     மிருள வீர்க்கோ 3டீர்க்குதையத்
தடங்க லின்றி யடுசரமே
     மிடைந்த4 தரணி வட்ட மெல்லாம்.
 
     (இ - ள்.) தொடங்குகின்ற சுடுசரங்கள் - தொடுக்கப்படுகின்ற கொடிய அம்புகளை,
சுருங்கி ஒருகை - நாணில் வைத்துச் சுருங்கியைப்பற்றி யிருக்கும் ஒருகை, செவிகாறும்
முடங்கும் - அந்நாண் செவிவரையிலே செல்லும்படி புரளா நிற்கும், ஒருகை - மற்றை
ஒருகை, சிலைவளையா - வில்லை வளைத்து, முடுக்கும் அக்கணைகளைத் தூண்டா நிற்கும்,
கண்டது இத்துணையே - அயல் நின்றார் கண்டது இவ்வளவே யாம், விசும்பெல்லாம் -
வானம் முழுதும், இடங்கள் இன்றி - இனி இடம் இல்லை என்னும்படி, இருள - இருண்டு
போய்விட, ஈர்க்கோடு ஈர்க்கு உதைய - அம்புகளின் சிறகுகளோடு சிறகுகள் நெருங்க,
தடங்கல் இன்றி - தடையில்லாதபடி, அடுசரமே - கொல்லும் அம்புகளே, தரணி
வட்டமெல்லாம் - பூமியின் வட்டமாகிய இடமுழுதும், மிடைந்த செறிந்தன, (எ - று.)
 
 

     (பாடம்) 1ணெறிந்த. 2னிமிரு. 3 டீர்க்கு தேய்த். 4தவனி.