பக்கம் : 844 | | | | வேக யானை செலவுந்திச் சிறுநா 1ணெறிந்து வெஞ்சரங்கண் மாக மெல்லா முடனடுங்கத் தொடங்கி னானம் மழைபோல்வான். | (இ - ள்.) ஆக - அவ்வாறாயின் ஆகுக, அமைக - அஃதமைவதாக, அதுவே அரசநீதி ஆகிவிடில் - அதுவே அரசர்க்குரிய அறமாய் விட்டால், போக - போவதாக. பொருவன் என - நான் இப்போது உன்னுடனே போர் செய்யா நிற்பேன் என்று வாய்தந்தன பிதற்றி, புகைந்து - உள்ளம் புகைந்து, பொரு வெஞ்சிலை ஒன்று இடன் ஏந்தி - போர் செய்தற்குரிய வெவ்விய வில் ஒன்றனைத் தன் இடக்கையின் ஏந்தி, வேக யானை செல உந்தி - சினமிக்க யானையை முன் செல்லக் கடாவி, சிறு நாண் எறிந்து - வில்லினது சிறிய நாணைத் தெறித்து, வெஞ்சரங்கள் - வெவ்விய அம்புகளை, மாகம் எல்லாம் உடன் நடுங்க - திசைகள் நடுங்கும்படி, தொடங்கினான் - தொடுக்கத் தொடங்கினான், அம்மழை போல்வான் - அம்புமாரி பெய்யும் மழையை நிகர்த்த அச்சுவணகேது, (எ - று.) சடிமன்னன் மொழிக்குத் தகுந்த மறுமொழி கூற வகையின்றி ஆக, அமைக, அதுவே போக, வென்று சுவணகேது பிதற்றினான் என்க. | ( 211 ) | சுவணகேதுவின் விற்போர் மாண்பு | 1342. | தொடங்கு கின்ற சுடுசரங்கள் சுருங்கி யொருகை செவிகாறும் முடங்கு மொருகை சிலைவளையா 2முடுக்குங் கண்ட தித்துணையே இடங்க ளின்றி விசும்பெல்லா மிருள வீர்க்கோ 3டீர்க்குதையத் தடங்க லின்றி யடுசரமே மிடைந்த4 தரணி வட்ட மெல்லாம். | (இ - ள்.) தொடங்குகின்ற சுடுசரங்கள் - தொடுக்கப்படுகின்ற கொடிய அம்புகளை, சுருங்கி ஒருகை - நாணில் வைத்துச் சுருங்கியைப்பற்றி யிருக்கும் ஒருகை, செவிகாறும் முடங்கும் - அந்நாண் செவிவரையிலே செல்லும்படி புரளா நிற்கும், ஒருகை - மற்றை ஒருகை, சிலைவளையா - வில்லை வளைத்து, முடுக்கும் அக்கணைகளைத் தூண்டா நிற்கும், கண்டது இத்துணையே - அயல் நின்றார் கண்டது இவ்வளவே யாம், விசும்பெல்லாம் - வானம் முழுதும், இடங்கள் இன்றி - இனி இடம் இல்லை என்னும்படி, இருள - இருண்டு போய்விட, ஈர்க்கோடு ஈர்க்கு உதைய - அம்புகளின் சிறகுகளோடு சிறகுகள் நெருங்க, தடங்கல் இன்றி - தடையில்லாதபடி, அடுசரமே - கொல்லும் அம்புகளே, தரணி வட்டமெல்லாம் - பூமியின் வட்டமாகிய இடமுழுதும், மிடைந்த செறிந்தன, (எ - று.) | |
| (பாடம்) 1ணெறிந்த. 2னிமிரு. 3 டீர்க்கு தேய்த். 4தவனி. | | |
|
|