பக்கம் : 845 | | சுருங்கி - நாணில் அம்பு தொடுத்தற்குரிய இடம். சுவணகேதுவின் ஒருகை நாணைப்பற்றி வில்லை வளைப்ப, மற்றைக்கை வில்லைப்பற்றி முடுக்க இவ் விருகையின் றொழிலையே அயலார் கண்டனர். இத்தொழிலால் உலகமுழுதும் கணைகள் நிரப்பப்பட்டன, என்க. | ( 212 ) | சடிமன்னன் அம்புக் குடையியற்றி அவற்றைத் தடுத்தல் | 1343. | சொல்லான் மலிந்த புகழினான் சுவணகேது சொரிகின்ற கல்லாற் கொண்டற் 1பெயல்போலுங் கணையின்மாரி கழல்வேந்தன் வில்லாற் செய்த விசால வட்ட மேலு2 நாலு மருங்கினுமாய்க் கொல்லாற் செய்த வேலாற்குக் குடையாய் நின்று 3கவித்ததுவே. | (இ - ள்.) சொல்லால் மலிந்த புகழினான் - மொழியாலே மிக்க புகழையுடையவனான, சுவணகேது - சுவணகேது, சொரிகின்ற - பொழியா நின்ற, கல்லார் கொண்டல் பெயல் போலும் - மலையிடத்தே பொருந்திய முகில்கள் பெய்யும் மழையைப் போன்ற, கணையின் மாரி - அம்புமழைகளை, கழல்வேந்தன் - வெற்றிக் கழல்கட்டிய சடிமன்னன், வில்லால் செய்த - தனது வில் வித்தையின் சிறப்பாலே இயற்றிக்கொண்ட, விசாலவட்டம் - கணைகளாலியன்ற அகலிதாய வட்டம் ஒன்று, மேலும் - மேற்புறத்தும், நாலுமருங்கினும் ஆய் - நான்கு திசைகளிலும் பரவி நின்று, கொல்லாற் செய்த வேலாற்கு - கொற்றொழிலாலே வடிக்கப்பட்ட வேற்படையுடைய அச்சடியரசனுக்கு, குடையாய் - பகைவன் அம்புபடாதபடி குடையைப் போன்று, நின்று கவித்தது - கவிழ்ந்து நின்றது, (எ - று.) விசாலவட்டம் - அம்பாலியற்றும் குடை.. | |
| (பாடம்) 1 புயல். 2 மேலு மருங்குமாய். 3 கவித்ததே. | | |
|
|