பக்கம் : 848
 

     சடிமன்னன் தொடுத்த அம்புகள் சுவணகேதுவின் வில் அம்புகளையும், அவன்
மனத்தே சிந்தித்த மாயத்தையும் துணித்து மன்னர்கள் புறமிடப் பாய்ந்து தூவி
தோன்றாதபடி நிலத்திற் குளித்து மறைந்தன என்க.
 

( 216 )

சுவணகேது பல்வேறு படைகளாற் போர்செய்தல்

1347. அம்புஞ் 1சிலையுங் கைம்மறிய
     வகத்த விஞ்சை துணிப்புண்டு
வெம்பு கின்ற 2மனத்தினனாய்
     வெய்யோன் மீட்டும் 3விறலோன்மேல்
வம்பு கொண்ட வளையங்கள்
     கணையம் விட்டு விட்டேறு
செம்பொன்னாழி 4யிவையெல்லாஞ்
     சென்று பாயச் சிந்தித்தான்.
 
     (இ - ள்.) அம்பும் சிலையும் கைம்மறிய - தன் அம்புகளும் வில்லும் தன்
கையகத்தினின்றும் ஒழிந்தனவாக, அகத்த விஞ்சை துணிப்புண்டு - உள்ளத்தே சிந்தித்த
மாயவித்தையும் கெட்டொழிய, வெம்புகின்ற மனத்தினனாய் - புழுங்கும்
மனத்தையுடையவன் ஆகி, வெய்யோன் - கொடியவனாகிய சுவணகேது, மீட்டும் - மீளவும்,
விறலோன் மேல் - வெற்றியையுடைய சடியரசன் மேலே, வம்புகொண்ட - புதுமையுடைய,
வளையங்கள் கணையம் விட்டு விட்டேறு செம்பொன் ஆழி - ஆழிகள் தடிகள் எறிகற்கள்
வேல், செவ்விய பொன்னாலியன்ற உருளை ஆகிய, இவை யெல்லாம் - இன்னோரன்ன
போர்க் கருவிகள் அனைத்தும், சென்று பாய சிந்தித்தான் - சென்று தாக்குமாறு வீசினான்,
(எ - று.)
     சிந்தித்தல் - சிந்துதல், வில்லம்புகளும் மனத்தே கொண்ட மாயமும்
அழிந்தொழிந்தவுடன் சுவணகேது ஆழி கணையம் முதலியன சடிமன்னன் மேல் வீசினான்,
என்க.
 

 ( 217 )


     (பாடம்)1 சிலையும் கையுமறுத்தகத்த விஞ்சை, கைமறுத் தகத்த.2 மனத்தனாய். 3 என்
செய்தான். 4 யவை.