தம்படை புற மிட்டமையும் பகைவர் வென்றமையும் தூதரால் உணர்ந்த சிறீசேனன் சினந்து சிரித்துப் போர்மேற் சென்றான் என்க. |
( 222 ) |
சிறீசேனன் உடைந்தோடும் தன் படையைத் தடுத்தல் |
1353. | கடைந்த கார்க்கடல் போற்கலந் 1துடைந்த வாட்படை யோடுநீர்க் கடைந்த வான்சிறை யாயினான் மிடைந்த வேற்படை வீரனே. |
(இ - ள்.) கடைந்த கார்க் கடல்போல் கலந்து உடைந்த - கடையப்பட்ட கரிய கடல்போலே பகைப்படையோடு போர் செய்து கலங்கிப் புறங்கொடுத்த, ஆட்படை - காலாட்படையாகிய, ஓடுநீர்க்கு - விரைந்து ஓடுகின்ற வெள்ளத்திற்கு, மிடைந்த வேற்படை வீரன் - செறிந்த வேல்வீரர் படையுடன் சென்ற சிறீசேனன் என்பான், அடைந்த வான் சிறை ஆயினான் - எதிரே அடைக்கப்பட்ட ஓர் உயரிய அணையாகித் தடுத்தான், (எ - று.) அடைந்த - அடைத்த: மெலித்தல் விகாரம். வாட்படை எனக் கண்ணழித்து வாளேந்திய படையெனக் கொள்ளினும் ஆம். புறங்கொடுத்து ஓடுகின்ற தம் படையாகிய ஆற்றிற்கிட்ட அணை போன்று, எதிர் நின்று சிறீசேனன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான், என்பதாம். |
( 223 ) |
சிறீசேனன் புறமிட்டோரை இடித்துரைத்தல் |
1352. | விஞ்சை வேந்தர்க ளேமிகை அஞ்சு வாரென வாயிடை நஞ்ச னார்களை 2நக்குவை 3வெஞ்சொ லான விளம்பினான். |
(இ - ள்.) மிகை அஞ்சுவார் விஞ்சை வேந்தர்களே, என - போர்க்களத்தே பெரிதும் அஞ்சுபவர்கள் விச்சாதர மன்னர்களே போலும் என்று கூறி, நஞ்சனார்களை - நஞ்சை யொத்த தன் படை மன்னர்களை, நக்கு - இகழ்ந்து சிரித்து, வைவெஞ்சொல் ஆன விளம்பினான் - வைதற்குரிய சுடுசொற்களைத் தன்னால் இயன்றவரையில் கூறினான், (எ - று.) |
|
|
(பாடம்) 1 துடைந்து வாட்படை வெள்ளநீர்க். 2நக்கிவை. 3கொஞ்சிலான் சிலகூறினான். |