பக்கம் : 854
 

     “மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
     பீடழிய வந்து விடத்து“ (திருக். செய். 968)

என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக.

     குன்றின் மேற் குடைவேந்திர் என்றது இகழ்ச்சி. என்னை ? பகைவர் ஏறுதற்கரிய
குன்றின் உச்சியிலிருத்தலால் நுங்கள் குடையுடன் நீவிர் வேந்தராயிருந்தீர் போலும்,
என்னும் குறிப்பிற் கூறினானாகலின் என்க.
 

( 226 )

இதுவுமது

1357. மான மாமணி வீழ்த்துயிர்க்
கூன மாமென வோடுவீர்
1ஈன வார்மயிர்க் கேதமாங்
கான மாவது காணுமே.
 
     (இ - ள்.) மானமாம் மணி வீழ்த்து - மானம் என்னும் பெறற்கரும் மணியை
எறிந்துவிட்டு, உயிர்க்கு ஊனமாம் என ஓடுவீர் - ஈண்டு நிற்கில் நம்முயிர்க்கு
உடலிழப்பாகிய ஊனம் நேரும் என்று அஞ்சி ஓடாநிற்பீர், ஈனவார் மயிர்க்கு - எளிய
ஒரோ ஒரு நீண்ட மயிரின் பொருட்டு, ஏதமாம் - இறந்தொழியும், கான மா - கவரிமான்,
அது காணுமே - அம்மானின் சிறப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கோள், (எ - று.)

     “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
     ருயிர்நீப்பர் மானம் வரின்“ (திருக்கு - 969)

என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக.

     ஓர் எளிய மயிரின் பொருட்டுக் கவரிமா உயிர்விடும், நீயிரோ அத்தகைய உயிரினை
ஓம்பற் பொருட்டுப் பெறற் கரிய மணிபோன்ற மானத்தை இழந்து ஓடுதிர், என
இரங்கினான் என்க.
 

( 227 )

உடைந்த வீரர் மீண்டும் போரேற்றல்

1358. ஈண்ட வின்னன சொல்லலு
மீண்டு விஞ்சைய ரேற்றனர்
ஆண்ட கைச்சுட ராயிடைத்
தூண்டி னான்சுடர் வேலினான்.
 
     (இ - ள்.) ஈண்ட - நெருங்க, இன்னன சொல்லலும் - இன்னோரன்ன மொழிகளைச்
சிறீசேனன் எடுத்துரைத்தவுடனே, விஞ்சையர் மீண்டு ஏற்றனர்
 
 

     (பாடம்) 1 கானவார்மயிர்க்கேதமாம்.