பக்கம் : 855 | | - அவ்விச்சாதரர்கள் நாணி மீண்டும் போர் ஆற்றச் சமைந்தனர், சுடர் வேலினான் - ஒளியுடைய வேற்படையுடைய சிறீசேனன், ஆயிடை - அச்செவ்வி தேர்ந்து, ஆண் தகை சுடர் தூண்டினான் - தன் வீர மொழிகள் என்னும் கோலாலே அப்படைஞர்களின் மறத்தன்மை என்னும் விளக்கு நன்கு எரியுமாறு தூண்டிவிட்டான், (எ - று.) ஆண்மையால் வீரர்கள் புகழ்விளக்க மடைதலின் அதனை ஆண்ட கைச் சுடர் என்றார். சிறீசேனன் பல மற மொழிகளால் புறமிட்டோரின் மனத்தைத் தேற்றி அவர்கள் மீண்டும் போர் புரிதற்குரிய துணிவினைப் பெறும்படி செய்தான் என்பதாம். | ( 228 ) | இது முதல் நான்கு செய்யுள் ஒருதொடர் (போர்த்திறம்) | 1359. | 1மிண்டு வாளினர் விஞ்சையர் மண்டி னாரெதிர் மண்டலுங் 2கண்ட கண்டம தாயினார் 3விண்ட னர்படை வீரரே. | (இ - ள்.) மிண்டு - நெருங்கிய, வாளினர் - வாள்களை உடையராய், விஞ்சையர் - விச்சாதரர்கள், எதிர்மண்டினார் - திவிட்டன் படைகளுக்கு எதிராக மண்டுவாராயினர், மண்டலும் - மண்டிய அப்பொழுதே, கண்ட கண்டமதாயினர் - தம் பகைவர்களால் துண்டு துண்டுகளாகத் தம்முடல் வெட்டப்பட்டு வீழ்ந்தனர், விண்டனர் படை வீரரே - எஞ்சிய படைமறவர்கள் ஓடிப் போயினர், (எ - று.) வெற்றியினாற் செருக்குற்று நின்ற திவிட்டன் படைக் கெதிர் சென்ற விச்சாதரர் கண்டகண்டமாக வெட்டப்பட்டனர், என்க. | ( 229 ) | | 1360. | கருவிப் புட்டிலின் கண்டமும் 4பொருவில் பக்கரைப் போழ்களும் விரவி 5வெங்கள வாயெலாம் புரவித் துண்டங்கள் போர்த்தவே. | (இ - ள்.) கருவிப் புட்டிலின் கண்டமும் - அம்புப் புட்டில்களின் தூள்களும், பொருவில் போழ்களும் - போர்வில்லின் துண்டுகளும், பக்கரைப் போழ்களும் - சேணத்தின் துகள்களும், விரவி - கலந்து, வெங்கள வாய் எலாம் - வெவ்விய போர்க்கள முழுதும், புரவித் துண்டங்கள் - குதிரையின் உடல் உறுப்புகளும், போர்த்தவே - மறைத்தன, (எ - று.) | |
| (பாடம்) 1கொண்ட. 2கண்டங்கள் கண்டங்கள் ஆயினார். 3விண்ட வாட். 4இருமிப். 5போர்க்கள. | | |
|
|