பக்கம் : 856 | | கருவிப்புட்டில் - அம்புப் புட்டில். பக்கரை - சேணம | (230) | 1361. | உருப்பு நீரவொள் வாள்களா 1னெருப்பு நீரவர் வீசலும் பொருப்பு வீழ்வன போன்றன மருப்பு நீண்மத யானையே. | (இ - ள்.) உருப்பு நீர - வெப்பத்தாலே இயற்றப்பட்டன போன்ற தன்மையுடைய, ஒள் வாள்களால் - ஒளியுடைய வாள்களாலே, நெருப்பு நீரவர் வீசலும் - தீயையொத்த மறவர்கள் வீசியவுடனே, மருப்பு நீள் மதயானையே - கோடுகள் நீண்டுள்ள மதம் பொழிகின்ற யானைகள், பொருப்பு வீழ்வன போன்றன - மலைகள் புரண்டு வீழ்வதைப் போன்று வீழலாயின, (எ - று.) உருப்பு - வெப்பம்; வெப்பம் எனும் பண்பால் இயற்றப்பட்டன போன்ற வாள்கள் என்க. மதயானைகள் மலைகள்போல் மறிந்து வீழ்ந்தன என்க. | (231) | 1362. | சீர்மு கந்தசெஞ் சேற்றினுள் ளார்மு கம்புக வாழ்ந்தரோ நீர்மு கந்நில 2முற்றபொற் றேர்மு கஞ்சிதை வுற்றதே. | இ - ள்.) சீர்முகந்த - ஒப்பனை செயப்பட்டனவாய் வந்து, செஞ்சேற்றினுள் - செவ்விய ஊனாகிய சேற்றிலே, ஆர்முகம் புக - தம் ஆர்க்கால் என்னும் உறுப்புக்கள் புதையுமாறு, ஆழ்ந்து - அழுந்தி, நீர்முகம் நிலமுற்ற - குருதி நீரையுடைய நிலத்தின்கண்ணே பொருந்தின, பொற்றேர் - பொன்னாலாகிய தேர்கள், முகம் சிதைவுற்றதே - தம் முன்புறம் சிதையப்பெற்றன, (எ - று.) தேர் சிதைவுற்றது - சாதி ஒருமை. சீர் முகந்த - பெயர், சீர்மையை ஏற்றுக்கொண்டனவாகிய தேர் எனக் கூட்டுக. ஆர் - ஆர்க்கால்கள். செஞ்சேறு - சிவந்த ஊனாகிய சேறு. | (232) |
| (பாடம்) 1 விருப்பு. 2 முற்றபோற | | |
|
|