பக்கம் : 857 | | | 1363 | சிறீசேனன் வருகை மாலும் வாட்படைப் போரினுள் ளாலு மாமிசை யானவன் 1காலன் காணென வந்தனன் சீல மானசி றீசேனனே. | (இ - ள்.) மாலும் - மயங்குதற்குக் காரணமான, வாட்படைப் போரினுள் - வாளால் ஆற்றுகின்ற போர்க்களத்திலே, ஆலும் மாமிசை ஆனவன் - கனைக்கின்ற புரவிமேலே அமர்ந்து வருவோன், காலன்காண் - மறலியேகாண், என - என்று கண்டோர் கூற, வந்தனன் - அவ்விடத்தே வந்தான், சீலமான சிறீசேனன் - ஒழுக்கமும் மானமும் மிக்க சிறீசேனன் என்பான், (எ - று.) கண்டோர் இவன் கூற்றனேகாண் என்று கூறும்படி குதிரையில் ஏறிச் சிறீசேனன் போர்க்களத்தே புக்கான் என்க. | (233) | சிறீசேனன் வீரமொழி | 1364. | மண்ணின் மேல்வரு வாரொடு மண்ணின் மேற்செரு வல்லனே விண்ணின் மேல்2வரு வாரொடு விண்ணின் மேற்செரு வல்லனே. | (இ - ள்.) மண்ணின் மேல் வருவாரொடு - நிலத்தின் மேலே வந்து போரிடும் மக்களோடே, மண்ணின் மேற்செரு வல்லன் - மண்ணின் மேல் நின்று செய்யும் மக்கட் போரினும் யான் நனி ஆற்றலுடையேன் அங்ஙனமன்றி, விண்ணின் மேல் வருவாரொடு - விசும்பிடத்தே இயங்கும் இயல்புடைய விஞ்சையருடனே, விண்ணின்மேற் செருவல்லன் ஏ - விசும்பிலே நின்று செய்யும் தெய்வப் போரினும் யான் நனி ஆற்றலுடையேன், கண்டீர், (எ - று.) அவ்வாறு வந்த சிறீசேனன், என்னுடன் மானுடர் எதிர்ப்பின் மக்கட் போருஞ் செய்யவல்லேன் ; விச்சாதரர் எதிர்ப்பின் தெய்வப் போருஞ் செய்யவல்லேன் என்றான் என்க. | (234) | இதுவுமது | 1365. | வாய்ந்த போரிவை வல்லிரே லேந்து மின்படை போந்தெனக் |
| (பாடம்) 1 காலனா மென. 2 லுறை. | | |
|
|