பக்கம் : 858
 
  காய்ந்த கட்டுரை கேட்டலுஞ்
1சேர்ந்த னன்சிறீ பாலனே.
 

      இ - ள்.) வாய்ந்த போர் இவை வல்லிரேல் - இவ்விரு வகைப் போரினுள் நுமக்குப்
பொருந்திய போர் என்னோடு ஆற்றவல்லீர் உளீராயின், போந்து படை ஏந்துமின் என -
என் எதிரே வந்து படைக்கலத்தை ஏந்துங்கோள் என்று சிறீசேனன் கூறிய காய்ந்த
கட்டுரை - சினத்தால் எழுந்த அறை கூவும் மொழிகளை, கேட்டலும் - செவியுற்ற
பொழுதே, சிறீபாலன் சேர்ந்தனன் - திவிட்டன் படைத்தலைவருள் ஒருவனான சிறீபாலன்
என்பான் அச்சிறீசேனனுக்கு முன்சென்று சேர்ந்தான், (எ - று.)

     “இவ்விருவகைப் போரினுள் யாது நுமக்கு விருப்பமானது அப்போரே யானும்
செய்வல், வல்லீர் ! வருக!“ என, சிறீசேனன் அறை கூவக் கேட்ட சிறீபாலன் அவன்முன்
சென்றெதிர்ந்தான் என்க.

(235)

1366. சிறீசேனனைச் சிறீபாலன் எதிர்தல்
உவரி 2யோங்கு திரையெனக்
கவரி வேய்ந்த 3கலினமா
விவர வேறி னானரோ
வெவரு மஞ்சு மீட்டினான்.
 
     (இ - ள்.) உவரி ஓங்கு திரையென - கடலிலே எழுகின்ற அலைபோலே, கவரி
வேய்ந்த கலினமா - உச்சியிற் சாமரை சூட்டப் பெற்ற வொரு குதிரையை, இவர ஏறினான்
- செலுத்தும் பொருட்டு (அதன்மேல்) ஏறலானான், எவரும் அஞ்சம் ஈட்டினான் -
எத்தகைய மறவரும் அஞ்சுதற்குக் காரணமான மறமாண்புடைய சிறீபாலன், (எ - று.)

     ஈடு - மாண்பு. சிறீபாலன் திரைபோன்ற கவரிசூட்டிய குதிரையை ஏறி எவரும்
அஞ்சும்படி வந்தான் என்க.

(236)

சிறீபால சிறீசேனர் போர்த்திறம்

1367. திரிவில் 4சாரி கைச்செயல்
புரவி சேர்ந்து பொங்கின
5வரிவில் வாளி மன்னரு
மருவு 6போர்ம யங்கினார்.
 
     இதுமுதல் பதினொரு செய்யுள்கள் ஒருதொடர்.

     (பாடம்) 1 சேந்தனன்சிரீ. 2வெண்டிரை யென. 3கலனமா. 4காரிகைத் தொழில்.
5உருவுவாளர். 6போரின்.