பக்கம் : 859
 

(இ - ள்.) திரிவு இல் சாரிகைச் செயல் - மாறுபாடிலாத சாரிகைத் தொழிலிலே, புரவி
சேர்ந்து பொங்கின - இருவருடைய குதிரைகளும் பொருந்திச் சினந்தன, வரி வில் வாளி
மன்னரும் - வரிந்த வில்லையும் அம்புகளையுமுடைய சிறீசேன சிறீபாலரும், மருவு போர்
மயங்கினார் -நெருங்கிய போர்த் தொழிலிலே பொருந்துவாராயினர், (எ - று.)

     இருவர் குதிரைகளும் சாரிகை சுற்றின ; இருவரும் போர்  செய்யத்  தொடங்கினர்
என்க.

(237)

1368. வில்லும் வாளும் 1வேல்களுஞ்
சொல்லி னாற்றொ ழிற்கொளீஇ
2யெல்லை யின்று பொழுதெலாந்
தொல்ல மர்தொ டங்கினார்.
     (இ - ள்) வில்லும் வாளும் வேல்களும் - விற்படையாலும், வாட்படையாலும்
வேற்படையாலும், சொல்லினால் - மந்திரமொழிகளை ஓதுதல் வாயிலாய், தொழில் கொளீஇ
- போர்த் தொழிலை மேற்கொண்டு, எல்லையின்று - ஒரு காலவரையின்றி, பொழுதெலாம்
- அந்நாள் முழுதும், தொல் அமர் தொடங்கினார் - தொன்று தொட்டுத் தமக்குரித்தாய்
வருகின்ற போர் செய்தலைத் தொடங்கினார்கள். (எ - று.)
    
     வில் முதலியவற்றாலும், மந்திரமோதிப் பழைய முறைமைத்தாய போரை இருவரும்
நெடுநேரம் ஆற்றினர் என்க.

(238)

1369. வெல்லு நீர விஞ்சையன்
வில்லும் வீசு குந்தமும்
வல்லி 3தின்ம டித்தனன்
மல்ல மர்ந்த மார்பினான்.
 
     (இ - ள்.) வெல்லும் நீர் அ விஞ்சையன் - வெல்லும் தன்மையுடைய அந்தச்
சிறீசேனனுடைய, வில்லும் - வில்லையும், வீசு குந்தமும் - பின்னர் வீசிய குந்தாலியையும்,
வல்லிதின் - வன்மையுடனே, மடித்தனன் - அழித்தான், மல்லமர்ந்த மார்பினான் -
மற்போரை விரும்பும் தோள்களையுடைய சிறீபாலன், (எ - று.)
   
     அவ்வாறு போர் செய்யும்பொழுது சிறீசேனனுடைய வில்லினையும் குந்தத்தினையும்
சிறீபாலன் அழித்தான் என்க.

(239)


(பாடம்) 1 குந்தமும். 2 எல்லையில் பொழுதெலாம். 3 தின்ன றுத்தனன்