பக்கம் : 861 | | (இ - ள்.) தளிதயங்கு தண்மது களிதயங்கு கண்ணியால் - துளியாக விளங்கும் குளிர்ந்த தேன் பொருந்தி மகிழ்ச்சி மிகுதற்குரியதான மலர் மாலையாலே, குளித வாளின் - தன் தோளிலே அழுந்திய பகைவனுடைய வாள் தடையுண்டமையால், எளிதமா உற்ற புண் - சிறிதே உண்டாய புண், இலங்கும் - மிளிரா நின்றது, (எ - று.) குளித வாள் - குளித்த வாள் ; கெடுதல் விகாரம். எளிதம் - சிறிது, மாலையால் தடையுண்டு சிறிதாகிய புண் இலங்கும் என்க. | (242) | 1373. | இட்ட 1வாளி றுத்தபின் விட்ட மாவின் 2மேற்செலாத் துட்ட 3மாத்து ரந்தனன் மட்டு வார்ந்த மாலையான். | (இ - ள்.) இட்டவாள் இறுத்தபின் - இவ்வாறு தான் வீசிய வாளைச் சிறீபாலன் துகளாக்கிய பின்னர், விட்டமாவின் - சிறீபாலன் ஊர்ந்த குதிரைக்கு, மேற்செலா - மேலே செல்லும்படி, துட்டமா துரந்தனன் - தனது கொடிய குதிரையை வானத்தே செலுத்தினான், மட்டுவார்ந்த மாலையான் - தேன் பொழியும் மாலையணிந்த சிறீசேனன், என்பான், (எ - று.) சிறீபாலன் தனது வாளைத் துகளாக்கியவுடன் சிறீசேனன் தன் குதிரையைச் சிறீபாலன் குதிரைக்கு மேலே செல்லும்படி செலுத்தினான் என்க. துஷ்டமா - துட்டமா என நின்றது. | (243) | | 1374. | மாதி போகு மானமா மீது போக விட்டவன் சோதி 4கூடு சுடர்முடிக் கேத மாக வெண்ணினான். | (இ - ள்.) மாதிபோகும் மானமா - மண்டலமாக ஓடுகின்ற வலிய குதிரையை, மீது போகவிட்டவன் - உயரச் செல்லும்படி செலுத்திய சிறீசேனனுடைய, சோதிகூடு சுடர்முடிக்கு - மிக்க சுடருடைய முடிக்கலன் அணிந்த தலைக்கு, ஏதம் ஆக - கேடு உண்டாக என, எண்ணினான் - சிறீபாலன் கருதினான், (எ - று.) மாதி - குதிரையின் நடைவகையுள் ஒன்று. சுடர்முடிக்கு ஏதமாக எண்ணுதலாவது:- தலையை அரிய வேண்டும் என்று கருதுதல் என்க. | (244) | 1375 | எண்ணி னன்னெ டுப்பலும் 5கண்ணி யஃது கருதிமா |
| (பாடம்) 1 வாள. 2 மேற்செலத். 3 மாக்கடாவினான். 1 கூட்டு நீண்முடிக், கூடுநீண்முடி. 2 கண்ணிய துணர்ந்தமா. | | |
|
|