பக்கம் : 863 | | (இ - ள்.) வானின் வாவு விஞ்சையன் - விசும்பிலே தாவிச்சென்ற, சிறீசேனனுடைய, மான மா மணிமுடி - பெருமை மிக்க சிறந்த மணிகள் அழுத்திய முடியணிந்த தலை, ஏனை மன்னன் ஏதியான் - மற்றவனாகிய சிறீபாலன் வாளால் ஏறுண்டு, மீனின் வந்து வீழ்ந்ததே - விண்மீன் வீழ்ந்தாற் போன்று மண்ணின் வந்து வீழ்ந்தது, (எ - று.) முன்னரே விண்ணிற் சென்ற சிறீசேனன் தலை, சிறீபாலனாற் றுணிக்கப்பட்டு, விண்மீன் வீழ்ந்தாற் போன்று மண்ணின்மேல் வந்து வீழ்ந்த தென்க. | (247) | | விச்சாதரர் படை உடைந்தோடுதல் | 1378. | திருநிலை யகமுடைச் செல்வன் செங்கதிர் விரிநிலை மணிமுடி மிளிர்ந்து வீழ்தலும் பொருநிலை 1யழிந்துபிற் புறக்கொ டுத்தது பருநிலை மலையவர் பரவைத் தானையே. | (இ - ள்.) திருநிலை அகம் உடைச் செல்வன் - திருநிலையகம் என்னும் நகரத்திற்கு அரசனாகிய சிறீசேனனுடைய, செங்கதிர் விரிநிலை மணிமுடி - செஞ்ஞாயிற்று மண்டிலம் விரிந்தாற்போன்ற நிலைமையினையுடைய மணிகளழுத்திய முடியையுடைய தலை, மிளிர்ந்து வீழலும் - ஒளியுடனே தரையில் வீழ்ந்தவுடன், பருநிலை மலையவர் பரவைத் தானை - பருத்து நிற்றலையுடைய மலைகளிலே வாழ்கின்ற அச்சுவகண்டனின் கடல்போன்ற படை, பொருநிலை அழிந்து - போர் செய்தற்குரிய ஆற்றல் அழிந்து, பின்புறங் கொடுத்தது - முதுகு காட்டி ஓடிற்று, (எ - று.) பிற்புறம் - முதுகு. திரு நிலையகம் என்னும் நகரத்திற்கு அரசனாகிய சிறீசேனன் என்க. பருநிலை மலையவர் என்றது உத்தரசேடியில் வாழ்வோராகிய விஞ்சையரை. | (248) | | கனக சித்திரன் அப்படையைத் தடுத்தல் | 1379. | வேயுடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள் ஆயிடை யுடைதலு மாழி யான்மகன் காய்வுடை மனத்தவன் கனக சித்திரன் சேயிடை புகுந்தன னின்று செப்பினான். | (இ - ள்.) வேய் உடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள் - மூங்கில்களையுடைய வெள்ளியாலாய மலையினை உடைய அரசர்கள், ஆயிடை உடைதலும் - அப்பொழுது புறமிட்டவுடன், ஆழியான் மகன் - |
| (பாடம்) 1 யழிந்தபிற். | | |
|
|