பக்கம் : 864 | | அச்சுவகண்டனுடைய மகனாகிய, காய்வு உடை மனத்தவன் - சினமிக்க மனத்தையுடைய, கனகசித்திரன் - கனகசித்திரன் என்பான், சேயிடை புக்கறன் - தொலையிடத்தே புகுந்து, நின்று - அவர்களைத் தடுத்து நின்று, செப்பினான் - கூறுவானாயினன், (எ - று.) வேயுடைவெள்ளி - வேய்ந்தாற் போன்ற வெள்ளி எனினுமாம். ஆழியான் - சக்கரப் படையுடைய அச்சுவகண்டன். அச்சுவகண்டன் மகனாகிய கனகசித்திரன் உடைந்தோடும் தன் படையிடை நின்று கூறினான் என்க. | (249) | | கனக சித்திரன் உடைந்த தம் வீரரைக் கடிந்துரைத்தல் | 1380. | உருவிய வாளின னுடுத்த கச்சினன் வெருவர விழித்தனன் 1வீரம் வேட்டுமா டொருவனை யொருவனங் கஞ்சி யோடுமேல் அருவருப் புடையதவ் வாண்மை 2யாகுமே. | (இ - ள்.) உருவிய வாளினன் - வாட்படையை உறை கழித்தவனாய், உடுத்த கச்சினன் - கச்சணிந்தவனாய், வெருவர விழித்தனன் - பகைவர் அஞ்சும்படி விழித்தவனாய், வீரம் வேட்டு - ஆண்மையை விரும்பி, மாடு ஒருவனை - தன் பக்கலிலே வந்தெதிர்ந்த பகைவன் ஒருவனை அஞ்சி, ஒருவன் - ஒரு மறவன், ஓடுமேல் - புறங்கொடுத் தோடுவானாயின், அவ்வாண்மை - அவனுடைய அத்தகைய வீரம், அருவருப்புடையது ஆகும் - மற்றையோரால் பழிக்கத்தக்கது ஆகும், (எ - று.) வாளினனும், கச்சினனும், வெருவர விழித்தவனும், வீரம் வேட்ட வனுமாகிய ஒரு மறவன், பகைவனை அஞ்சி ஓடுவானாயின், அவ்வீரனுடைய ஆண்மை கேட்டற்கே அருவருப்புடையதென்றான், என்க. | (250) | | இதுவுமது | 1381 | மதிதொடு நெடுவரை 3மான விஞ்சையர் விதிபடு 4மனிசரை வெருவி மீண்டனர் அதிசய மிதுவென வலர நக்கனன் கதிர்விடு வளையெயி றுடைய காளையே. | (இ - ள்.) மதிதொடு நெடுவரை - திங்களைத் தொடுமாறுயர்ந்த நீளிய மலைகளிலே வாழும், மான விஞ்சையர் - மானம் மிக்க விச்சாதரர்கள், விதிபடு மனிசரை வெருவி - நம் விதியிலே அகப்பட்டு வாழும் எளிய மானிடரை அஞ்சி, மீண்டனர் - மீள்வாராயினர்!, இது அதிசயம் - இச்செயல் |
| (பாடம்) 1வீரவேகமோ. 2யாகுமோ. 3மாள. 4மனிதரை. | | |
|
|