பக்கம் : 869 | | அவ்வாறு தோன்றிய கனகசித்திரன் குதிரைகளைத் துணிபடத் துணித்தும் தேர்களைச் சிதைத்தும் களிறுகளை மாய்த்தும் போர்வெறி தீர்ந்தானில்லை என்க. | (258) | இதுவுமது | 1389. | வார்குலாங் 1கருங்கழன் மன்ன ரேற்றவர் நீர்குலாங் குருதியுட் குளிப்ப நேரினி யார்கொலேற் பவரென வஞ்ச வெஞ்சினக் கார்குலா முருமெனக் காளை தோன்றினான். | (இ - ள்.) ஏற்றவர் - கனகசித்திரனைப் போரில் எதிர்த்தோரனைவரும், நீர்குலாம் குருதியுட்குளிப்ப - நீர்போல இயங்குகின்ற குருதியிலே முழுகிப்போக, வார்குலாம் கருங்கழல் மன்னர் - வாரின்கண்ணே பொருந்திய கரிய வீரக்கழலையுடைய அரசர் எல்லாம், இனி நேர் யார்கொல் ஏற்பவர் என அஞ்ச - இனி, கனகசித்திரன் எதிர்சென்று போர் ஏற்கும் ஆற்றலுடையார் யாரே உளர் என்று அஞ்சாநிற்ப, கார்குலாம் வெஞ்சின உரும் என - முகிலின்கட்டோன்றும் வெவ்விய சினமுடைய இடியேறு போன்று, காளை தோன்றினான் - கனகசித்திரன் தோன்றுவானாயினன், (எ - று,) போர் வெறி தீராதவனாய், ஏற்றவர் குருதியுட் குளிப்பவும், அஞ்சவும் உருமெனத் தோன்றினான் என்க. | (259) | | அச்சுவகண்டன் தம்பியர் போர்க் கெழுதல் | 1390. | காளைநங் கனைகழற் கனக சித்திரன் வாளம ரழுவத்து மண்டி னானெனக் கேளவர் மொழிதலுங் கிரீவன் றம்பிமார் ஆளிவர் கடற்படை யனன்றெ ழுந்ததே. | இ - ள்.) காளை - காளைபோல்வானாகிய, நம் கனகசித்திரன் - நம்முடைய கனகசித்திரன், வாள் அமர் அழுவத்து - வாட்போர் செய்யும் போர்க்களத்தே, மண்டினான் என - சென்றான் என்று, கேளவர் - தூதர்கள், மொழிதலும் - கூறியவுடனே, கிரீவன் - அச்சுவகண்டனுடைய, தம்பிமார் - தம்பியர் நால்வருடைய, ஆளிவர் கடற்படை - மறவர்கள் இயங்காநின்ற கடல் போன்ற பெரியபடை, அனன்று - வெகுண்டு, எழுந்ததே - போர் செய்யப் புறப்பட்டது. |
| (பாடம்) 1 கருங்குழன். | | |
|
|