பக்கம் : 870 | | இவ்வாறு கனகசித்திரன் நூழிலாட்டுதலைத் தூதர்களாற் கேள்வியுற்ற அச்சுவகண்டன் தம்பிமார்களுடைய கடல் போன்ற பெரும்படையும் சினந்து கனகசித்திரனுடன் வந்து கூடிற் றென்க. | (260) | இது முதல் 16 செய்யுள்கள் ஒரு தொடர் | 1391. | வெருவிமுன் னுடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர் ஒருவில்வா ளழுவம்வந் துந்து 1மப்படை உரவுநீ ரிருங்கட லோதம் போந்தபின் அரவநீர் வேலைமீ தலைப்ப தொத்ததே. | (இ - ள்.) முன் வெருவி உடைந்துபோய் - முன்னர் அஞ்சிப் புறமிட்டு ஓடிப்போய், பெயர்ந்து - மீண்டும், வேற்றவர் ஒருவு இல் - பகைவர்கள் நீங்காது நின்ற, வாள் அழுவம் வந்து - வாட்போர் உடற்றும் போர்க்களத்தே புகுந்து, உந்தும் அப்படை - போர் செய்யா நின்ற அவ்விஞ்சையர் படை, உரவு நீர் இருங்கடல் ஓதம் - மிக்க நீரையுடைய பெரிய கடலின் அலையொன்று, அரவநீர் வேலைமீது போந்தபின் - ஒலியுடைய நீரையுடைய கரைமீதுபோன பின், அலைப்பது ஒத்தது - மீண்டும் வந்து தாக்குதல் போன்றிருந்தது, (எ - று.) முன் உடைந்தோடிப் பின்வந்து போர் செய்யும் விஞ்சையர் படை கரையை எய்தியுடைந்த அலை மீண்டு வந்து தாக்குதல் போன்றிருந்தது என்பது கருத்து. ஓதம் - அலை. வேலை - கடற்கரை. | (261) | 1392. | மன்னவற் கிளையவர் வயிர மால்வரை அன்னவ ரயிற்படை யரச வீரர்கள் துன்னலர்க் கரும்படர் தோன்றத் தோன்றுபு 2முன்னினர் கனன்றுபோர் முறுக முட்டினார். | (இ - ள்.) மன்னவற்கு இளையவர் - அச்சுவகண்டன் தம்பியராகிய நீலகண்டன் முதலிய நால்வரும், வயிரமால்வரை அன்னவர் - பெரிய வயிரமலையை ஒத்தவர்கள், அயிற்படை அரச வீரர்கள் - வேற்படையையுடைய வீரர்களும் அரசராகிய வீரர்களுமாகிய, துன்னலர்க்கு - பகைவர்களுக்கு, அரும்படர் தோன்ற - கடத்தற்கரிய துயர் தோன்றும்படி, தோன்றுபு - போர்க்களத்தே தோன்றி, முன்னினர் - முற்பட்டனர், கனன்று - பெரிதும் வெகுண்டவராய், போர்முறுக முட்டினார் - போர்த்தொழிலிலே மிக மோதினார்கள், (எ - று.) |
| (பாடம்) 1 மற்படை.2முன்னினார் கனன்றுபோர் முறுகி மூட்டினார். | | |
|
|