பக்கம் : 872 | | | 1395. | முரிந்தன மணிநெடுந் 1தேர்கண் முத்துக நெரிந்தன களிறுடை மருப்பு நேர்முகம் சரிந்தன தலைபல 2தறுக ணில்லவர் இரிந்தன ரிழிந்தது குருதி நீத்தமே. | (இ - ள்.) மணி நெடுந்தேர்கள் முரிந்தன - மணிகள் அழுத்தப்பட்ட நெடிய தேர்கள் ஒடிந்தன, களிறுடை மருப்பு முத்து உக நெரிந்தன - யானைகளின் கோடுகள் முத்துக்கள் சிதறும்படி நெரிவுற்றன, நேர்முகம் தலைபல சரிந்தன - எதிர்ப்பக்கத்தே பல தலைகள் சரிந்து வீழ்ந்தன, தறுகண் இல்லவர் இழிந்தனர் - வீரமில்லாதார் பலர் புறமிட்டோடினர், குருதி நீத்தம் இழிந்தது - அவ்வழி எங்கும் செந்நீர் வெள்ளம் ஓடலாயிற்று, (எ - று.) தேர்கள் முரிந்தன, களிறுகள் மருப்பு நெரிந்தன, தலைகள் சரிந்தன, வீரமில்லாதவர் புறமிட்டோடினர், யாண்டும் குருதிவெள்ளம் பெருகி ஓடிற்றென்க. யானைக் கொம்புகளில் முத்துக்கள் தோன்றுதல் உண்மையின் முத்துக நெரிந்தன மருப்பு என்றார். | (265) | | 1396. | மரைமயி ரணிந்தன மான 3மாப்பல திரையென வுருண்டன திலத வெண்குடை நுரையென நிவந்தன நுந்து மப்புனற் கரையெனக் கிடந்தன களிற்றின் 4கூவையே. | (இ - ள்.) மரைமயிர் அணிந்தன மானம் மாபல - கவரிமானின் மயிராலே ஒப்பனை செய்யப்பட்ட பெருமை மிக்க பல குதிரைகள், திரையென - கடலின் அலைபோன்று, உருண்டன - போர்க்களத்தே உருளலாயின, திலத வெண்குடை - சிறந்த வெள்ளைக்குடைகள், நுரையென நிவந்தன - அக்கடலிடத்தே நுரைகளைப்போன்று மிதந்தன, நுந்தும் அப்புனல் - ஈர்த்துச் செல்லும் அக்கடலுக்குரிய, கரையென - கரையைப்போன்று, களிற்றின் கூவை கிடந்தன - யானைக் கூட்டங்கள் மாண்டு கிடந்தன, (எ - று.) அப்போர்க்களத்தே குதிரைகள் கடலின் அலைபோன்று உருண்டன. குடைகள் நுரைகளைப் போன்று மிதந்தன, அக்குருதிக் கடற்கமைந்த கரையைப் போன்று யானைப்பிணங்கள் கிடந்தன என்க. | (266) | | 1397. | பெருகிய குருதியுட் பிறங்கு செந்தடி அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே |
| (பாடம்) 1தோள்கண். 2தம்மையில்லவர். 3மாயலைத். 4குப்பையே. | | |
|
|