பக்கம் : 873
 
  சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலால்
பொருகளம் புற்றெடுக் கின்ற 1போலுமே.
 
     (இ - ள்.) பெருகிய குருதியுள் - பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளத்தே, பிறங்கு
செந்தடி - விளங்குகின்ற செவ்விய ஊனாகிய, அருகுடை - பக்கத்தே உளதாகிய,
அளற்றினுள் - சேற்றிடத்தே, பாகமே அழுந்தி - ஒரு பகுதி மாத்திரையே புதையுண்டு,
சொரிகதிர் கோடக முடிகள் தோன்றலால் - பொழிகின்ற ஒளியை உடைய கோடகமாகச்
செய்யப்பட்ட முடிகள் காணப்படுதல் உண்மையின், பொருகளம் - அப்போர்க்களமானது,
புற்று எடுக்கின்ற போலும் - புற்றுக்களைத் தன்பால் தோற்றுவனபோலத் தோன்றா நிற்கும்,
(எ - று.)

     கோடகமுடியின் ஒரு பகுதி புதையுண்டு ஒருபகுதி மேலே தோன்றுதல், புற்றுக்கள்
தோன்றுவன போன்று காணப்பட்டன என்பதாம்.

     கோடகமுடி - ஐந்துவகை முடிக்கலன்களுள் ஒன்று. அவையாவன:- தாமமுடி,
முகுடமுடி, பதுமமுடி, கோடகமுடி, கிம்புரிமுடி என்பன. இவற்றுள் கோடகமுடி
சிகரவடிவிற்று ஆகலின் புற்று உவமையாயிற்று என்க.

(267)

1398. மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் 2தண்டினாற்
பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின்
கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத்
தோடுடைந் தொருவழித் 3தொகுத லொத்தவே.
 
     இ - ள்.) மாடு அடைந்து - தம் பக்கலிலே எய்தி, பீடு அடைந்தவர் -
மறமாண்புடையோர், தம் வயிரத்தண்டினால் - தமது வயிரமணியாலியன்ற தடியாலே,
பிடர்புடைப்ப - தம் எருத்திலே தாக்க, ஆனையின் - யானைகளின், உடைந்து உதிர்ந்தன
கோடு - நுறுங்கி உதிர்ந்த கொம்புகள், கொடுமுள் - வளைந்த முட்களையுடைய, கேதகை -
வெள்ளைத்தாழை மலர்களின், தோடுடைந்து - இதழ்கள் சிதறி, ஒருவழி - ஓரிடத்தே,
தொகுதல் - குவிதலை, ஒத்தவே - ஒத்திருந்தன, (எ - று.)

     வீரர்கள் வயிரத் தண்டாலே மோதினமையால் நுறுங்கி உதிர்ந்த யானைமருப்புக்கள்
வெண்டாழை மலர்த்தோடு சிதறிக் குவிந்ததை ஒத்திருந்தன என்பதாம்.
 

(268)

 
1399. குழைசுடர்ந் திலங்குதா ரரசர் கோலமாண்
இழைசுடர் தோள்களா லெறிய யானையின்
 

     (பாடம்) 1தொக்குமே. 2தண்டினாம். 3தொகுத்த.